Posts

Showing posts from July, 2025

௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார்

Image
இலக்குவனார் திருவள்ளுவன்         28 July 2025         No Comment ( உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார்  – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் ௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? கடல் கொண்ட குமரிக் கண்டம் தொட்டு வடபால் எல்லையாம் பனிமலை வரை தமிழர் பரவி வாழ்ந்ததாகப் பண்டைத் தமிழர் வரலாறு கூறுகிறது . உலகுக்கு நாகரிகம் உணர்த்திய பெருமை தமிழர்க்கே உரியது!  தமிழ்மொழி ஒன்றே உலகப் பொதுமொழியாக இருக்கக்கூடிய தகுதி பெற்றது  என்கிறோம். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றே உலக ஒழுக்க நூலாக இருக்கும் தகுதி வாய்ந்தது  என்கிறோம். ஆனால், தமிழர்தம் ஆண்டுக்கணக்கு, தமிழ்க்கணக்குகள் தமிழ்ப்பகைவர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. அக்கம் பக்கம் உள்ள நாட்டினர், நாவலந்தேயத்தின் (இன்று இந்தியா) வளங்கருதிப் போந்து, பொருள்களைக் கொள்ளை கொண்டு சென்றனர். சிலர் வந்து நிலையாகத் தங்கிவிட்டனர். ஒரு மொழி வைத்து உலகாண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இன்றில்லை. முத்தமிழ்க் கழகங்கள் மூன்று நிறுவி தமிழ்மொழியை ஆய்ந்த...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 99 : மாளிகையில் இசை முழக்கம்

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         27 July 2025         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு-தொடர்ச்சி) பூங்கொடி மாளிகையில் இசை முழக்கம்           பண்ணும் இசையும் பயில்வோர் ஒலியும்,        80           தண்ணுமைக் கருவி தந்திடும் முழக்கும், தெரிதரு யாழில் விரிதரும் இசையும், முறிதரு கருவிகள் மோதுநல் லொலியும், காய்வேங் குழலின் கனிந்தநல் லிசையும்,                 ஆய்நூற் புலவர் அறைந்தநாற் கருவியும்,        85           கற்பார் மிடற்றுக் கருவியுங் கலந்து பொற்புடன் வழங்கும் புத்திசை வெள்ளம் மடாமிசைப் பிறந்து மறுகிடைப் பரந்தது; ஆடவர் பெண்டிர் அவ்விடை வழங்குநர்         ...

உ. தமிழர் திருமணமுறை – திருத்துறைக்கிழார்

Image
ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்         21 July 2025         அ கரமுதல (க. பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் உ.தமிழர் திருமணமுறை தொல் பழந்தமிழர் திருமணமுறை தமிழர்கட்கு இன்று புதுமையாகத் தோன்றுகின்றது. ஏன்? ஆரியர் தமிழகம் போந்து விளைத்த சீர்கேடுகளுள் இஃது ஒன்று! தமிழர்தம் மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியன கெட்டு யாவும் ஆரியமயமாகிவிட்டமையை எத்துணைத் தமிழர் அறிவர்? ஆகவே, பண்டைத் தமிழர் திருமண முறை பற்றி இன்று பேசினால் இற்றைத் தமிழர் ஏற்க மறுக்கின்றனர். ஆரிய முறை அத்துணை ஆழமாகத் தமிழரிடையே வேரூன்றிவிட்டது. பெரியார் ஈ.வெ.ராவும் ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் பட்டி, தொட்டியெங்கும் சென்று தமிழர் திருமணமுறை பற்றி எடுத்துக் கூறினார். சீர்திருத்தத் திருமணம் என்பதை ஏற்ற மக்களும், ஆரிய முறைப்படி தாலிகட்டுவதைக் கைவிடவில்லை! இவற்றிற்கெல்லாம் அடிப்படை யாது? தமிழர்கள் பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் படிப்பதைக் கைவிட்டு, ஆர...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 98: கோமகன் வியப்பு

Image
ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         20 July 2025         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 97. இயல் 20. பெருநிலக்கிழார் வாழ்த்திய காதை தொடர்ச்சி ) பூங்கொடி கோமகன் வியப்பு           கள்ளவிழ் கோதை கழறிய உரைகேட் டுள்ளமும் உடலும் புழுங்கின னாகிக் கள்ளுண் டான்போற் கலங்கினன் செல்வோன், `காவயிம் வல்லான் கற்பனை தூண்டும்           ஓவியம் என்ன உருவம் உடையள், 45           பாலும் பழமும் பஞ்சணை மலரும் நாலும் விழையும் நல்லிளம் பருவம், வேலும் வாளும் மானும் விழியள், காமக் கோட்டத்துக் கடவுட் சிலையிவள்                   வாமக் காளையர் வழிபடு தெய்வம்,       50 இதற்கு நலத்தள் எழில்வளர் பூங்கொடி எட்டுணை யேனும் எண்ணிலள் காமம், பெட்டவர் பலராய்ப் பெருகினும், இவளோ விட்டனள் காமம், இவள்செயல...

க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் – திருத்துறைக்கிழார்

Image
  ++++   இலக்குவனார் திருவள்ளுவன்         14 July 2025         அ கரமுதல (திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – க௪. தமிழுக்குச் சிறை?) ஆ. தமிழர் க.பண்டைத் தமிழர் கண்ட அறிவியல் நுணுக்கங்கள் பண்டைத் தமிழர் அறிவியலறிவு படைத்தவராக இருந்தனர் என்பதைத் தமிழ் இலக்கியம், இலக்கணங்களில் இலைமறைகாய் போலப் பரவலாகக் காணலாம். ஏன்? சில சொற்கள் கூட அறிவியல் கருத்துகள் பொதிந்தனவாக உள்ளனவென்பது நுணுகிக் காண்பார்க்குப் புலனாகும்.  தமிழ்ச்சொற்கள் யாவும் பொருள் குறித்தனவே என்பதை ஒல்காப்புகழ்த் தொல்காப்பியம் வலியுறுத்துகின்றது . காட்டாக, ஞாலம், ஞாயிறு, உலகம் என்னும் சொற்களைக் காண்போம். ஞாலம் என்றால் அசைதல் என்றும், ஞாயிறு என்றால் பொருந்தியிருப்பது என்றும், உலகம் என்றால் உருண்டு திரண்டு இருப்பது என்றும் பொருளாம். ஆயின்,  நிலவுலகம் உருண்டையானது; சுழல்வது என்பதையும்; சூரியன் நிலையாக இருப்பது என்பதையும் நுணுகியறிந்தே தமிழர் இச்சொற்களை ஆக்கியிருத்தல் வேண்டும்  எனத் தெரிகின்றது. இங்ஙனம் பல சொற்கள் உளவேனும், விரிவஞ்சி விடுத்தாம். வானி...