Skip to main content

பாடுவேன் இவரை! – பேரறிஞர் அண்ணா

அகரமுதல

பாடுவேன் இவரை!
எவரைப் பாடமாட்டேன்?
வாழ்வின் சுவை தன்னை
வகையாய்ப் பல்லாண்டு
உண்டு, உடல் பெருத்து
ஊழியர் புடை சூழ
தண்டு தளவாடமுடன்
தார் அணிந்து தேர் ஏறும்
அரசகுமாரர் அருளாலய அதிபர்
தமைக் குறித்து அல்ல.
பாடுவேன் இவரை
குடிமகனாய் உள்ளோன்
ஊர்சுற்றும் உழைப்பாளி
தோள்குத்தும் முட்கள் நிறை
மூட்டைதனைச் சுமப்போன்
தாங்கொணாப் பாரந்தன்னைத்
தூக்கித் தத்தளிப்போன்
களத்தில் பணிபுரிவோன்
உலைக் கூடத்து உழல்வோன்
ஏரடிப்போன்
தூக்கம் தொட்டிழுக்கும்
துயர் கக்கும் கண் கொண்டோன்
குளிர் கொட்ட மழை வாட்ட
குமுறிக் கிடந்தோர்
விழி இழந்தோர்
முடமானோர்
இவர்பற்றி என் கவிதை
இஃதே என் காவியம் காண்
– பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் (02/02)

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue