Skip to main content

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 37(2.07) : பரத்தையை விலக்கல்


தலைப்பு-வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம், இல்வாழ்வியல் ;thalaippu_v-u-chithambaranaarin_meyyaram-ilvaazhviyal

மெய்யறம்
இல்வாழ்வியல்

37(2.07) பரத்தையை விலக்கல்


  1. பரத்தை யின்பினைப் பலர்க்கும் விற்பவள்.
பரத்தை உடலின்பத்தைப் பலருக்கும் விற்பவள்.
  1. மதுசூ திரண்டினும் பொதுமகள் கொடியள்.
எல்லோருக்கும் சொந்தமாகக் கூடிய அவள் மது, சூது இவ்விரண்டை விடத் தீமை தரக் கூடியவள்.
363.அவணடை யுடைநோக் காதியா லழிப்பாள்;
அவள் மீது நம் கவனம் சென்றால் நம்மை முற்றிலும் அழிப்பாள்.
  1. இன்பந் தருதல்போற் றுன்பெலாந் தருவள்;
இன்பம் தருவது போல் எல்லாத் துன்பங்களையும் தருவாள்.
  1. உடைமுதற் பொருளெலா முயிரொடு கவர்வள்.
அவள் நமது செல்வமனைத்தையும் கவர்வதோடு உயிரையும் கவர்ந்துவிடுவாள்.
  1. அவளினும் வஞ்சக ரவனியி லில்லை.
அவளை விடத் தீயவர் இந்த உலகத்தில் இல்லை.
  1. அவளினுங் கள்வ ரருளின ரெனலாம்.
அவளை விடத் திருடர் கருணை நிறைந்தவர்.
  1. அவளுள நினைந்தாற் றவசியுங் கெடுவான்.
அவளை நினைத்தால் தவம் செய்பவர்களும் அழிந்துவிடுவர்.
  1. அவளா லந்தோ வழிந்தவ ரநேகர்.
அவளால் முற்றிலுமாக அழிந்தவர் பலர்.
370.அவளிலா நாடே யழிவுறா நாடு.
அவள் இல்லாத நாடே வளர்ச்சி அடையும்.

– வ.உ.சிதம்பரனார்
தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue