Thamizh kadamaigal: தமிழ்க்கடமைகள் 3- தமிழ் மயம் ஆகுக :மாகறல் கார்த்திகேயனார்

தமிழ் மயம் ஆகுக

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : May 17, 2011

தமிழ் கற்க
தமிழை முன்னே நீ கற்க;
நின் மகனுக்குக் கற்பிக்க;
எவ்வளவு கூடுமோ அவ்வளவு கற்க;
கற்பிக்க; கேட்க; கேட்பிக்க;
இடையிடையே ஆங்கிலம்
கலந்து பேசற்க;
புகழ் நிமித்த மாகவும்
பொருள் நிமித்த மாகவும்
ஆங்கிலம் கற்றல் சிறப்பாகாது;
எப்போதும் தமிழையே
தெய்வம் போலவும்
நற்றாய் போலவும் சிந்திக்க;
நீ தமிழ் மயம் ஆனால்
நின்மக்களும் தமிழ்மயம் ஆவர்;
நின்குடியும் தமிழ் மயமாகும்.
நின் கை தமிழ்நூல் எழுதுக
நின் வாய் தமிழையே பேசுக
நின் மனம் தமிழையே சிந்திக்க
நோய் கொண்டு மெலியனாயின்
மருந்துண்டு வலியனாகித்
தமிழ் கற்க!
- மாகறல் கார்த்திகேயனார்


Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue