Skip to main content

வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்

அகரமுதல

வன்மை எனக்குஅருள்வாய் !

அன்புள்ள இறைவனே
என்வேண்டுதல் கேட்டருள்வாய்
வன்மை எனக்குஅருள்வாய் – நீ
எண்ணும் முடிவை ஏற்பதற்கு
பொறுத்தருள்வாய் என்னை நீ – நான்
வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின்
எனை அழைத்திடல் ஏற்றதென
நினைத்திடில் உடனே நீ
வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல்
கழிபேரன்பு கொண்டோர்க்கே
என்றனுக்கு உதவிடுவாய்
தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே
ஏனென்று கேட்பையோ
உன்விழைவே சாலச்சிறந்ததுஎன
ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும்
உதவிடுவாய்  ஓ இறைவா
அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய்
உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும்
அச்சத்தினாலன்று
என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே

– இளவல்

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue