Posts

Showing posts from April, 2026

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௪. எழுக தமிழினமே!

Image
ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         12 April 2026         அகரமுதல  (திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௩.  திராவிட நாடும் தேர்தலும்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்   தமிழ்நாடு ௪.  எழுக தமிழினமே! தமிழ்நாட்டு எல்லைப் பகுதிகளை அயல் மாநிலத்தார் பறித்துக் கொண்டன போக எஞ்சியுள்ள குறுகிய தமிழகத்தையும் அண்டையிலுள்ள கேரளம், கன்னடம், தெலுங்கம் மாநிலத்தார் தமிழ்நாட்டில் அவர்கள் மிகுதியாக வாழும் பகுதிகளைத் தங்களுக்கு உரிமை கோரி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் தமிழுக்கே உரிய இடம் அளிக்கப்படாத போழ்து, சிறுபான்மையினராக வாழும் அயல் மாநிலத்தார் தங்கள் மொழிகளையும் பயிற்று மொழிகளாக்க முயல்கின்றனர். பெயரளவில் இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் தமிழ்நாட்டில் சமற்கிருத மொழியையும் ஒரு பாடமொழியாக்க வேண்டுமென்று இந்திய நடுவணரசு முயல்கின்றது. இந்தி மொழி பெரும்பாலும் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டுவிட்டது. தமிழக ஆளுநர் சன்னாரெட்டி இந்தி படித்த தமிழ்நாட்டாருக்கு பட்டச்சான்று வழங்கியஞான்று தேசிய ஒருமை...