Posts

Showing posts from November, 2025

கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         27 November 2025         அ கரமுதல ( க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல்  பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் அரும்பாடுபட்டு ஆய்வு செய்து, இராசீவ் கொலைக்கு ஈழத்தமிழ் விடுதலைப்புலிகள் இயக்கந்தான் மூலகாரணம் என்று முடிவு செய்து பலரைக் கைது செய்து சிறைக்கோட்டத்திலிட்டனர். அன்றியும், விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திரு...

கரு. தடைச்சட்டமும் தமிழினமும் 1/3: திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         27 November 2025         அ கரமுதல ( க௪.  தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு.  தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3 தமிழக அரசு இன்று (28.01.1992) பயன்படுத்தும் தடைச்சட்டத்தைத் ‘தடா’ என்று இந்தியில்++ சொல்கின்றனர். ‘தடா’ என்றால் தடைசெய்யாத என்று தமிழில் பொருள்படும். ‘இந்தி’ தான் தமிழுக்கு எதிரியாயிற்றே! 21.05.1991 அன்று 10.50 மணிக்கு திரு மரகதம் சந்திரசேகரன் போட்டியிட்ட திருப்பெரும்புதூர் தொகுதிக்குத் தேர்தல்  பொழிவுக்கு திரு. இராசீவு காந்தி வந்தபோது மாலையில் வெடிவைத்துக் கொல்லப்பட்டார். அதன் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரும், புலனாய்வுத் துறையினரும் அரும்பாடுபட்டு ஆய்வு செய்து, இராசீவ் கொலைக்கு ஈழத்தமிழ் விடுதலைப்புலிகள் இயக்கந்தான் மூலகாரணம் என்று முடிவு செய்து பலரைக் கைது செய்து சிறைக்கோட்டத்திலிட்டனர். அன்றியும், விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வ...

க௪. தமிழர் என்றும் ‘இந்தி’யை ஏற்கமாட்டார் – திருத்துறைக் கிழார்

Image
  ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         20 November 2025         அ கரமுதல (க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார் : தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் க௪. தமிழர் என்றும்  ‘ இந்தி’ யை ஏற்கமாட்டார் வடஇந்தியர் “தேசிய ஒருமைப்பாடு, தேசிய மொழி பாரதம் ஒரே நாடு” என்றெல்லாம் பேசி  இலக்கிய இலக்கணமற்ற, தனக்கென்று எழுத்தில்லாத எண்ணூறு ஆண்டுக்குள் தோன்றிய பண்படாத மொழியாகிய “இந்தி” மொழியை இந்தியத் தேசிய மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் ஆக்குவதற்கு முனைந்து செயல்பட்டு வருகிறார்கள். தென் மாநிலங்களின் மக்கள் இந்தியை ஏற்க அணியமாயில்லையாயினும், பேராயக் கட்சியினர் ஆட்சி புரியும் மாநிலங்களில் தற்பொழுது மும்மொழிக் கொள்கையை ஏற்றுச் செயல்படுகின்றனர். ஆனால், தமிழ்நாடு மட்டில் இருமொழிக் கொள்கையையே கடைப்பிடித்து வருகிறது. ஏனெனில், தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பு பேராயத்திற்கோ, வேறு அனைத்திந்தியக் கட்சிக்கோ 1967 முதல் கிட்டவில்லை. எனினும், நடுவணரசு (தில்லியரசு) கோடிக்கணக்கில் பணத்தைச்...

க௩. போலித் தமிழர் – திருத்துறைக் கிழார்

Image
ஃஃஃ          இலக்குவனார் திருவள்ளுவன்         13 November 2025         அ கரமுதல ( கஉ. இந்திய அரசே, தமிழினத்தைப் பழிவாங்காதே!  – திருத்துறைக்கிழார்- தொடர்ச் சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ . தமிழர் க௩. போலித் தமிழர் இன்று  தமிழ் நாட்டில் பலவகையான மக்கள் வாழ்கின்றனர். கிறித்தவர், இசுலாமியர், இந்துக்கள், சமணர், சீக்கியர், பௌத்தர் முதலிய மதத்தினரும், முதலியார், நாயக்கர், இரெட்டியார், நாயுடு, மராட்டியர், வேளாளர், தேவாங்கர், வன்னியர், கள்ளர், மறவர், நாடார், கௌடர், படையாட்சி, பள்ளர், பறையர், அம்பலக்காரர், முத்தரையர், பார்ப்பனர் முதலிய பல குலத்தினரும், தெலுங்கர், மலையாளர், கன்னடர், தமிழர், ஆங்கிலர், இந்தியர், மராட்டியர், சௌராட்டிரர், குசராத்தியர், சமற்கிருதர் முதலிய பலமொழி பேசுபவரும் வாழ்கின்றனர். தமிழ் மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர். ஐந்து கோடியில் ஒன்று அன்றி ஒன்றரைக் கோடிப் பேர் இருப்பர். ஆனால், தமிழ்நாட்டில் குடியேறி பல ஆண்டுகளாக வாழ்பவர் பலர்  மதவேறுபாடு, ம...