கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3: திருத்துறைக் கிழார்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 04 December 2025 அ கரமுதல ( கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 1/3: தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் புலவர் வி.பொ.பழனிவேலனார் ஆ.தமிழர் கரு. தடைச்சட்டமும் தமிழ் இனமும் 2/3 இலங்கை அரசுடன் இந்தியா உடன்படிக்கை இந்திராகாந்தி இந்தியாவை ஆண்டகாலத்தில் தமிழ்நாட்டிற்குரிய கச்சத்தீவு இலங்கையரசிடம் விடப்பட்டது. தமழக அரசு வடவரக்கு அடிமையாயிருப்பதால் தட்டிக்கேட்கத் துணிவில்லை. கேட்டால் பதவி பறிபோகும்! ஈழ விடுதலைப்புலிகள் போராட முற்பட்டனர். ஈழத்தமிழர் இளைஞர் பலர் படையில் சேர்ந்தனர். சிங்களர் அரசுடன் போர் தொடங்கினர். சிங்களர் திணறினர். இலங்கையரசால் தாக்குப் பிடிக்கவியலவில்லை. அமெரிக்கப் படைகள் தங்க இலங்கையில் இடமளிக்க முடிவு செய்தது இலங்கையரசு. இந்த முடிவு இந்திய அரசுக்குப் பெருந்தலைவலியாகிவிடும் என்ற அச்சத்தால் இராசீவு காந்தி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசின் தலைவர் செயவர்த்தனா வுடன் ஓர் உடன்படிக்கை ...