Skip to main content

வேண்டா வரன் கொடை! – சி. செயபாரதன்


வேண்டா வரன் கொடை!  



  1. பேயும் இரங்குமாம் பெண்ணென்றால் ! கருப்பிணித்
தாயோ கருவழிப்பாள்  தான்விரும்பி !  – காயிலே
பெண்கருவைத் தாயழித்தால் பின்னெங்கே ஆண்வருக்கம் ?
கண்ணிரண்டும்  போன கதை !

  1. ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
சூழத்தீ  இட்டது கண்ணகிக்கு ! – வாழாது
மீண்டும் நகைச்சண்டை !  மேனியில்தீ  தங்கைக்கு !
வேண்டாம் வரதட் சணை !

  1. தாலிகட்ட நூறுபவுன் ! தாயாக்க வேறுபவுன் !
கூலிமுதல் தந்தால்மூ கூர்த்தமெனும் – வாலிப
ஆண்மகனும் தாசியைப்போல் ஆசையுள்ள தாசனே !
வேண்டாம் வரதட் சணை !
அறிவியலர் சி . செயபாரதன், கனடா

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue