Thirukkural திருக்குறள் 1163
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
நோனா உடம்பின் அகத்து.
(குறள்எண்:1163)
குறள் விளக்கம்
மு.வ : துன்பத்தைப் பொருக்காமல்
வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும்
நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
சாலமன் பாப்பையா : காதல்
துன்பத்தையும், அவரிடம் சொல்ல முடியாமல் நான்படும் வெட்கத்ததையும் தாங்க
முடியாத என் உடம்பில், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு அதன் ஒரு
புறத்தில் காதல் நோயும், மறுமுனையில் வெட்கமும் தொங்குகின்றன.
Thirukural » Kamam
| |||||||
Comments
Post a Comment