Posts

Showing posts from May, 2026

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை?

Image
  ஃஃஃ      அகரமுதல       இலக்குவனார் திருவள்ளுவன்         18 May 2026         (திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்    தமிழ்நாடு அ. ஏன் தமிழ்நாட்டிற்கு விடுதலை? தமிழருக்கென ஒரு நாடு இல்லை. பலகோடி தமிழர் பிழைக்க வழிவகையின்றி அயல்நாடுகளுக்குச் சென்று அல்லல்படுகின்றனர். தம் தாய்மொழி, பண்பாடு, நாகரிகம் வளம்பெறச் செய்ய வாய்ப்பின்றி இடர்ப்படுகின்றனர். ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்! அயல்நாட்டார் பலர் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். இந்திக்காரர் வந்து தமிழ்நாட்டில் குடியேறுகின்றனர். காசுமீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியர் எவரும் எந்த இடத்திலும் குடியமர உரிமை உண்டென இந்திய அரசியல் சட்டம் செய்யப்பட்டுள்ளது. அதுகொண்டு தமிழ்நாட்டில் அவர்கள் நிலையாகக் குடியேறி, தொழில்கள் செய்கின்றனர். பள்ளி, கல்லூரிகள் நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிமப்பொருள்கள் யாவும் வடநாட்டிற்கே கொண்டு செல்கின்றனர். வருவாய் மிகுந்த இரு...

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 3. குமுகாய அமைப்பு, 4.பொருளியல் நிலை, 5.மக்கள் வாழ்க்கை நிலை

Image
ஃஃஃ      அகரமுதல       இலக்குவனார் திருவள்ளுவன்         11 May 2026         (தி ருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி- தொடர்ச்சி ) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்    தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 3.குமுகாய அமைப்பு ஐந்தாயிரம் ஆண்டுகட்குமுன், அஃதாவது முக்கழகக் காலங்களில் இன்றுபோல குலப்பிரிவுகள் (சாதி) இல்லை. ஆரியர்  இந்நாட்டில்  குடியேறிய  பின்னரே  பிர்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதத்தில் சேர விரும்பாத மக்கள் ஐந்தாம் குலம் (சாதி), “பஞ்சமர்”, “தீண்டப்படாதவர்”  என அழைக்கபப்ட்டனர். இவர்களுக்கு முன்கூறிய நான்கு பிரிவினர்களுடன் எவ்வகைத் தொடர்பும் இல்லை. அவர்கள்  வாழும் இடங்களில் வாழக்கூட உரிமையில்லை. ஆங்கிலத்தில்  “untouchables, outcastes” என்றழைக்கப்பட்டனர். மேல்காட்டிய நாற்குலத்தினர் வாழும் தெருக்களில் நடந்து செல்லக் கூட உரிமையில்...

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி

Image
  ஃஃஃ    அகரமுத ல      இலக்குவனார் திருவள்ளுவன்         04 May 2026         (திருத்துறைக்கிழார் கட்டுரைகள்  : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்    தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 1.தமிழ்நாடு ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால்  குமரிக்கண்டம்  என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே! குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று ; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த மக்கள் நான்கு திசைகளுக்கும் சென்று குடியமரத் தொடங்கினர்; அவர்கள் பேசிய மொழி தமிழ்; அவர்களுள்  ஒரு பிரிவினர், வடதிசை நோக்கிச் சென்று பனிமலை வரை வாழ்ந்தனர்;  அவர்கள்தாம் திரவிடர்கள் (Dravidians)  எ...