Posts

Showing posts from December, 2021

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 21

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 January 2022         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 20 தொடர்ச்சி)   குறிஞ்சி   மலர் அத்தியாயம் 8  தொடர்ச்சி   “செல்லம், அந்த அக்காவை விட்டுவிடாதே. அடுத்த மாதம் முதல் மாதர் சங்கத்திலே தினம் சாயங்காலம் இவங்க தமிழ்ப் பாடமெல்லாம் சொல்லிக் கொடுக்கப் போறாங்க. நீயும் தவறாமப் போகணும்” என்று சிரித்துக் கொண்டே பெண்ணுக்குச் சொன்னாள் மங்களேசுவரி அம்மாள். “இந்த அக்கா சொல்லிக் கொடுப்பதாக இருந்தால் நான் இருபத்து நாலுமணி நேரமும் மாதர் சங்கத்திலே இருக்கத் தயார் அம்மா” என்றவாறே புள்ளிமான் போல துள்ளிக் குதித்து ஓடிவந்து பூரணியின் கையோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நகைத்தாள் செல்லம். நேரமாயிற்று. பூரணி புறப்பட்டாள். “வண்டிஓட்டியை வண்டி எடுக்கச் சொல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் போய் இறங்கிக் கொண்டு வண்டியைத் திருப்பி அனுப்பி விடு” என்று அந்த அம்மாள் கூறியதை மறுத்துவிட்டாள் பூரணி. “என்னை நடந்து போகவிடுங்கள் அம்மா! அதிகப்படியான பெருமைகளைக் கொடுத்து வேதனைப் படுத்தாதீர்கள். இந்த மதுரை நகரத்தில் தெருக்களில் வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் இன்பமும

இராவண காவியம்: பாயிரம்: தமிழகம், தமிழ்மக்கள்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 December 2021         No Comment (இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 6-10 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் தமிழகம்   11.பண்டு நம்மவர் பாத்துப் பலவளங் கண்டு சுற்றங் கலந்து கரவிலா துண்டு வாழ வுதவி யுலகவாந் தண்ட மிழகந் தன்னை வழுத்துவாம். 12.நினைத்த நெஞ்சு நெகிழகந் தாயகம் அனைத்து முண்டு யாழியோ டாரியம் இனைத்த ளவுட னின்றியாங் கண்டுள தனித்தி ராவிடத் தாயினைப் போற்றுவாம். தமிழ்மக்கள் ஒழுக்க மென்ப துயிரினு மேலதன் இழுக்கம் போலிழி வில்லை யெனுஞ்சொலைப் பழக்க மாக்கிப் பயின்று பயின்றுயர் வழக்க மாந்தமிழ் மக்களைப் போற்றுவாம்.   14.குன்று மாரியக் கொள்கை மறுத்தெதிர் நின்று தாழ்ந்த நிலைமையை யெய்தியும் குன்றி யேனுந்தங் கொள்கையை விட்டிடா வென்றி மேதமிழ் வீரரைப் போற்றுவாம். 15.கள்ள ரென்று மறவரென் றுங்கடைப் பள்ள ரென்றும் பறையரென் றும்பழித் தெள்ள நொந்து மியல்பிற் றிரிகிலா மள்ள ராந்தமிழ் மக்களைப் போற்றுவாம்.   தொடரும் இராவண   காவியம் புலவர்   குழந்தை

ஈழத்துச் சிறுகதை இலக்கியம் – தொடர்ச்சி: மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 December 2021         No Comment (முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 14   4 1950 ஆம் ஆண்டுகளின் சிறுகதைப் போக்குகள் 60 ஆம் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளர்ச்சி அடைவதைக் காணலாம். உண்மையில் 50 களில் அரும்பிய போக்குகள் 60 களில் முதிர்ச்சி அடைந்தன என்று கொள்வதே பொருத்தம்.  50 களில் தோன்றிய எழுத்தாளர்கள் பலர் 60 களிலேயே அதிக ஆற்றலுடன் எழுதத் தொடங்கினர்.  புதிய எழுத்தாளர்கள் பலர் எழுத்துலகில் புகுந்தனர். 1956இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து இடதுசாாிச் சிந்தனைப் போக்கின் செல்வாக்கு 60 ஆம் ஆண்டுகளில் ஆழமாகவும் பரவலாகவும் ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் இடம் பெறத் தொடங்கிற்று. இதேகாலப் பகுதியில் பன்னாட்டு வழி முறையில் பொதுவுடைமைக்  கட்சிகளில் ஏற்பட்ட சித்தாந்தப் பிளவு இலங்கையையும் பாதித்தது. ‘ சமாதானம் மூலம் சமூகமாற்றம்’ என்ற திாிபுவாதக் கருத்தை எதிர்த்து ‘புரட்சியின் மூலம் சமூகமாற்றம்’ என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தவர்கள் இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தனியாகப் பிாிந்து சென்றனர் . முற்போக்கு எழுத்தா

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 45

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 December 2021         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார். 44. தொடர்ச்சி) அகல்   விளக்கு அத்தியாயம் 18 தொடர்ச்சி “சந்திரா!” என்றேன். “அம்மா இல்லையா? போய்விட்டார்களா? ஐயோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?” என்று விம்மி அழுதான். அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன். “எப்போது இறந்து போனார்கள்?” என்றான். “ஒரு மாதம் ஆச்சு.” “அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே” என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், “நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்” உன்னோடு யாராவது வந்திருக்கிறார்களா?” என்று படபடப்பாகக் கேட்டான். “பொறு. சொல்கிறேன். அவசரப்படாதே. அவசரப்பட்டது போதும். உன்னுடைய நன்மைக்காகவே உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன். நீ இப்படிக் கல்மனத்தோடு பிரிந்து வந்துவிட்டாயே” என்றேன். “அதெல்லாம் இருக்கட்டும். யார் வந்திருக்கிறார்கள் சொல். எங்கே இருக்கிறார்கள் சொல்” என்றான். என்னால் எதையும் மறைக்க முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். “ஐயோ” என்று தலைமேல் கை வைத்துக் கொண்டு அந்த இடத்திலே