Posts

Showing posts from May, 2020

இலக்குவனார் மறுபதிப்பாய் இவரைச் சொல்வேன்!- மறைமலை இலக்குவனார்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         08 May 2020         No Comment இலக்குவனார்   மறுபதிப்பாய்  இவரைச் சொல்வேன்! இனத்திற்கும்  தமிழினுக்கும்  ஏற்றம் காண ஈரோட்டார்  பாதையிலே  நாட்டம் கொண்டு அண்ணாவும்  நாவலரும்   போற்றும் வண்ணம் எந்நாளும்  கழகத்தின்    வெற்றிக் காக இரவுபகல் பாராமல்   உழைத்த  நல்லோர் சுரதாவால்  பாராட்டுப் பெற்ற   புலவர்    பணத்திற்கோ  பதவிக்கோ  எந்த நாளும்  பற்றின்றி  வாழ்ந்திருக்கும்  கவிஞர் அன்றோ?1 பெருவளப்  பூராரென்று  சொன்னால்  உடனே இளஞ்செழியன்  திருமுகமே கண்ணில் தோன்றும்! தமிழ்ப்புலமை   மேலோங்கி மிளிர்ந்த தாலே தன்பேச்சால் கவித்திறத்தால்    சிறப்பு பெற்றார் நாவலர்க்கும்  செழியனுக்கும்  தம்பி என்றே நாட்டிலுள்ள  அனைவருமே  நவில்வர் அன்றோ? பாட்டினிலே ஏட்டினிலே   தனித்த பண்பால் பாவேந்தர்   பரம்பரைக்குப்   பெருமை  சேர்த்தார்!2 அலுவலுக்கும் வருவாய்க்கும்   ஆசை இன்றி அண்ணாவின் பெரும்படையில்  களங்கள் கண்டார்; சிலநாளில்    தமிழாசான்   பணியைச் செய்தார்; சிலநாளில்   உணவகத்தை  நடத்தி வந்தார் இதழ்நடத்தி  வருவாயை  இழந்த

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு! – பெ.அ. இளஞ்செழியன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         08 May 2020         No Comment தமிழியக்கத் தலைமைப் போராளி பேராசிரியர் இலக்குவனாருடன்  என் முதல் சந்திப்பு! 05.02.1967 1.மீசைவைத்த இலக்குவனார் அடடா,அந்த மேதையின்மேல் எனதுள்ளம் வைத்த அன்போ, ஓசைவைத்த கடலினும் பெரிய தாகும்! உண்மைவைத்த நெஞ்சுடையார் தமிழ்மேல் அன்னார் ஆசைவைத்த தைப்போலே வைத்த வர்,யார்? ஆவியையே தமிழ்மேலே வைத்த செம்மல்! மாசைவைத்த மனமுடையோர் அவர்மேல் இங்கே மாறிமாறி வைத்ததுன்பம் மலைநி கர்க்கும்! 2.நாடகப்பே ராசிரியர் என்றன் ஆசான் நடராச னார்க்கே, யாம் விழாஎ டுத்தோம்! பாடுபுகழ் கல்லக்குடி என்னும் ஊரில்! பாராட்டிப் பேசுதற்கே கி.ஆ. பெ.வி. நாடுபுகழ் இலக்குவனார் இருவ ரையும் நல்லதொரு மகிழுந்தில் அழைத்துச் சென்றேன்! ஓடுமணிப் பொழுதெனக்குத் தெரிய வில்லை! உரையின்பப் படகினிலே பயணம் செய்தோம்! 3.இலக்குவனார் சந்திப்பும் திருச்சி யில்தான்! எனதழைப்பை ஏற்றந்த மான வேங்கை, கலக்கவந்த மேடையினை என்ன சொல்வேன்? கருத்துமணிச் சொற்பொழிவைப் படைத்தார் அங்

தரணி ஆளும் தமிழ் – கா.ந.கல்யாணசுந்தரம்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         05 May 2020         No Comment தரணி ஆளும் தமிழ்  உலகறியும்   மொழிகளிலே   தமிழ்   மொழிபோல் உயர்தனிச்    செம்மொழி   வேறில்லை  ! இலக்கண   இலக்கிய   வரலாற்றோடு இலங்கும்   தமிழுக்கிணை   ஏதுமில்லை  ! பொதிகை   மலைச்   சாரலாய்ப்    புவிமீது பார்போற்ற   வாழும்   மொழித்   தமிழாகும்  ! வாழ்வியலாம்   வள்ளுவத்தில்   நிலைபெற்று வான்   போற்றும்   தமிழெங்கள்   அமுதாகும்  ! சங்கம்   வளர்த்த   மாமதுரை   வீதியெங்கும் அங்கமாய்த்   தமிழ்த்தூண்கள்   அரணாகும்  ! மூவேந்தர்   புகழ்   பாடிப்    பாரெங்கும்   முத்தமிழே   இனி   எங்கள்   உரமாகும்  ! வரிவடிவத்   தமிழின்   தொன்மைக்குச்   சான்றாகி   வைகையாற்றுத்   தமிழர்   நாகரிகமாய்க்    கீழடி  ! உலகின்   முதல்   மொழித்   தமிழென்று   உணர்த்துகின்ற   அகழாய்வே   எங்கள்   தாய்மடி  ! ஈராயிரம்   ஆண்டுக்கு   முற்பட்ட   திருக்குறளே இணையிலா   உலகப்   பொதுமறை  ! ஓராயிரம்   ஆண்டுப்   பழமை   உரைக்கின்ற ஆத்திச்சூடி   நாமறிந்த   திருமறை  ! பிராமி   வடிவம்   தமிழுக்கு   மூலமெ