Posts

Showing posts from January, 2021

இந்தி தெரியாது போடா! – ஆற்காடு க.குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 January 2021         No Comment இந்தி தெரியாது போடா! என்றியம்பிட  வழி இல்லை தோழா! எங்கு காணினும் ‘ஜி’…….. ஒலிக்கிறது 4’ஜி’  5’ஜி’ ஆள மயக்குது   மக்கள் மத்திய அரசை நம்பவில்லை நம்பாமல் மந்திரிகள் பதவியே இல்லை ஆளும் வருக்கம் ஆடிப் போய்க் கிடக்கிறது நாளும் வழக்கு கூடிப்போய் மிரட்டுது   வயிற்றுப் பிழைப்புக்கு வந்த வடக்கிந்தியன் வாயிலாக தென்னிந்தியா முழுதும் தறி கெட்டுத் திரிகிறது இந்தி   இந்தி தெரியாது போடா என்றியம்பிட வழி இல்லை தோழா   பணியாற்ற வந்தவனிடம் பண்டம் விற்க வழக்கு மொழியாய் வளருது இந்தி வக்கற்ற தமிழனின் நாவினில் வருது முந்தி   பெட்டிக்கடையில் குட்டி போடுது வட்டிக் கடையில் வாழ்ந்துகொண்டிருந்த இந்தி   இந்தி தெரியாது போடா என்றியம்பிட வழி இல்லை தோழா   சமற்கிருதத்தில் சடங்கு நடக்குது சந்தேகம் கேளாமல் சன்மானம் கொடுக்குது   ஆலயந் தோறும் அருச்சனை நடக்கிறது அருத்தம் தெரியாமல் ஆண்டவனைத் தொழுகிறது.   கூட்டம் போட்டு கூவும்  கூட்டம் ஆட்டம் முடிந்ததும் ஓட்டம் பிடிக்கிறது மாற்றம் ஏதுமில்லை மண்டிபோட்டு மதியை இழந்து மத்தியில் கிடக்கிறது   நாற்காலி பதவிக

கனவு நனவாக! – ஆற்காடு க. குமரன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         06 January 2021         No Comment கனவு நனவாக என் மொழி ஆட்சி மொழி என்று அரசாணை வெளியிட்டது எங்கு காணினும் என் மொழி பெயர்ப்பலகைகளில்   ழகரம் யகர ஒலிப்பின்றித் தமிழனின் நாக்கில் தவழ்ந்தது தலை நகர் கிளை நகர் அத்தனையிலும் தலைமையானதென் தமிழ் மொழி   வணிக மொழிகளில் கூட வலிமையானது என் தமிழ் மொழி வீதியில் நின்ற  விவசாயிகள் வீட்டுக்கு வந்தனர்   நாட்டினர் விருந்தோம்பலுக்கு விதையிட்டனர் நாடாளும் மன்னர் எல்லாம் நல்லவனாயினர்   வழக்கு மன்றங்கள் எல்லாம் வழக்கின்றி வலு விழுந்தன காவல்துறை எல்லாம் ஏவல் பணியைக் கைவிட்டனர்   போக்குவரத்து நெரிசல் இல்லை போக்குவரத்துத் தடையும் இல்லை போகும் வரும் அமைச்சர்கள்   கஞ்சி குடிக்கவும் கட்டித் தழுவவும் ஆண்டுக்கு ஒரு முறை வந்த அமைச்சர்கள் அனுதினமும்  அன்போடு   பேதமே  இல்லாத சிறைச்சாலை தண்டனைகள் தமிழில் பேசாவிட்டால் தண்டனை அரசாணை   அரசுப் பள்ளியில் பயின்றவருக்கே அரசுப் பணி முன்னுரிமை தமிழர்கள் மட்டுமே தமிழ்நாட்டின் தலைவர்களாய்   எந்த மதத்தையும் இழிவாக நினைக்காத மனிதர்கள் சொந்த மதத்தை மட்டும் உயர்வாக நினைக்காத மனிதர்கள்   கைகழுவ

இனித்தது உன் பெயர்! -ஆற்காடு க. குமரன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         04 January 2021         No Comment இனித்தது உன் பெயர்!   திரும்பிப் பார்க்க வைத்தது நீ மட்டும் அல்ல உன் பெயரும் திரும்பத் திரும்ப உச்சரித்துப் பார்த்தேன் தேனாய் இனித்தது   எழுதி எழுதிப் பார்த்தேன் என் உயிரோடு ஒட்டிக் கொண்டது   பிரிவின் போது எல்லாம் படித்துப் பார்த்தேன் பரிவாய் உணர்ந்தேன் என் பெயரோடு சேர்த்து எழுதிப் பார்த்தேன் ஏழு பிறவி இனித்தது உன் பெயரைப் பிரித்துப் பார்த்தேன் உறைந்த பிணமாய் உணர்ந்தேன்   உன்னோடு வாழ விட்டாலும் என்னோடு வாழும் உன் பெயரோடு நான் இன்னும் உயிரோடு   எங்காவது உன் பெயரைக் காண்கையில் என்னைத் தொடர்வதாய்  உணர்கிறேன்   வேறு பெயரோடு காண நேர்ந்தால் வேரறுந்த மரமாய் விழுந்து போகிறேன்   மகளுக்கு வைத்து அழகு பார்க்கிறேன் மனத்தில் பதிந்த உன் பெயரை   என் கல்லறையிலாவது எழுதி வையுங்கள் காண்பவர்கள் அறியக்கூடும் அவளைவிட அவள் பெயர் அழகென்று!   இவண் ஆற்காடு க குமரன் 9789814114

நின்னை நீ மதி! அதுவே நிம்மதி! – ஆற்காடு க. குமரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         02 January 2021         No Comment நின்னை நீ மதி! அதுவே நிம்மதி!   உன் நிழல் கூட உனக்குச் சொந்தமில்லை! அது உன்னை ஊடுருவ முடியாத ஒளிக்கதிரின் பிம்பம்   மெய்யும் பொய்யே தான் உயிர் எனும் மெய் உன்னை விட்டு விலகும் போது   உனக்குள் ஊடுருவும் இயற்கையும் இதயமும் மட்டுமே உண்மை   உனக்குள் இருக்கும் காற்றுதான் உன்னைச் சுற்றியும் இருக்கிறது உள்ளும் வெளியும் உலவும் காற்று உனக்குள் இல்லாமல் போனால் இந்தப் பூவுலகும் உனக்கில்லை!   நீ, நீயாக இரு! உன் நிழல் கூடக் கருப்பாகத் தான் இருக்கிறது நீ மட்டும் வெள்ளையாக இரு உண்மையாக இரு! வன்மையாக இரு!   உண்மையாக இருந்தாலே போதும் உண்மை யுள்ளவர்களைத் தவிர் மற்றவர்களுக்கு உன்னைப் பிடிக்காது போகலாம்   எல்லாருக்கும் பிடித்துச் சுவைக்க நீ தின்பண்டம் அல்ல எல்லோரும் பார்த்துக் களிக்க கலைப் பொருளல்ல உன்னை நீ விரும்பக் கற்றுக்கொள்!   மற்றவர்க்கு நீ என்ன செய்ய நினைக்கிறாயோ அதை முதலில் உனக்கு நீயே செய்து பார் உனக்கு நீயே தீமை செய்து கொள்ள தீ வைத்துக்கொள்ள மனம் வராது உனக்கு ஏற்படும் நன்மை தீமைக்கு நீயே காரணம்!   அதற்கும் காரணம் உன்மீது