Posts

Showing posts with the label பழமையும் புதுமையும்

அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார்

Image
  ஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         14 September 2025         அ கரமுதல (எ. மறைந்த நமது பண்பாடு மீளுமா? – திருத்துறைக் கிழார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார்   கட்டுரைகள் புலவர்   வி . பொ . பழனிவேலனார் ஆ.தமிழர் அ. பழமையும் புதுமையும் பழமை என்பது முதன் மாந்தன் தோன்றி வாழ்ந்து வந்த காட்டுமிராண்டிக் காலம் எனக் கருதிவிடல் வேண்டா.  பண்பட்ட நாகரிகமெய்திய நல்வாழ்வு வாழ்ந்த நற்காலத்தையே. அக்காலங் கடந்து இன்றுகாறும் நடைபெறுகின்ற காலத்தையே புதுமையென்று குறிப்பிடுகின்றோம். பழமையில் தமிழர் தனிவாழ்வு வாழ்ந்தனர். உயர்ந்த நாகரிகத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு ஊட்டினர். தந்நலம் பெரிதெனக் கருதாது நாட்டுக்கும், மொழிக்கும் நற்பணி புரிந்தனர். தமிழ்மொழி ஒன்றே தமிழரின் ஆட்சிமொழி, பேச்சுமொழி, அனைத்து மொழியுமாக இருந்தது.  தமிழர் பனிமலைமுதல் குமரிவரை பேராட்சி புரிந்தனர்.  சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று மேலைநாட்டறிஞர் ஆய்ந்து அறைகின்றனர். கடல் கொண்ட தென்னாடாகிய குமரிக் கண்டமே முதல் தமிழர் தோன்றிய தொ...