Posts

Showing posts from June, 2022

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 – வெ.அரங்கராசன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 July 2022         No Comment (திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4 தொடர்ச்சி ) முனைவர்   கு . மோகனராசின்   திருவள்ளுவர்   அகப்பொருள்   நெறி நூலாய்வுக் கட்டுரை – 4/4 1 3.0.0.0. நலம் நடைநலம்: ஒரு நூலை / ஆய்வு நூலை மிகக் கடினப்பட்டு, நூலாசிரியர் நெய்கிறார். அந்நூல் ஆய்ஞர், அறிஞர், கற்றார், கல்லார், சுவைஞர் என அனைவரிடமும் சென்று அகத்துள் பதிய வேண்டும். அவ்வாறு செலச்செல்வதற்கு நூலின் நடை நலம் மிக இன்றியமையாதது. அப்போதுதான், நூலாசிரியரின் ஆய்வுக்கும் அரிய உழைப்புக்கும் ஆன்ற பயன் ஊன்று நிலை தோன்றும்.                இதன் நடை எல்லோருக்கும் புரியும்படியான எண்பொருளவாகச் செலச்சொல்லும் தண்தமிழ் நடை. கடினமான நூற்பாக்களை எளிமையாக நுவலும் ஏற்புடைய நடை. தெளிவு மிக்க தீந்தமிழ்த் தனிநடை, பொலிவு மலிந்த நடை; போற்றலுக்கு உரிய பொற்றமிழ் நடை. 13.1.0.0. அகச்சான்றுகள் — 8 மட்டும்: அறம், பொருள், இன்பம் என்னும் பாகுபாட்டில் அறத்தின் பொருளும் உண்டு. இன்பமும் உண்டு. பொருளில் இன்பமும் உண்டு. அறமும் உண்டு. இன்பத்தில் அறமும் உண்டு.  பொருளும் உண்டு. இது எளி

நம்பிக்கையுடன் எழு! : கி.பி. அரவிந்தன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 June 2022         No Comment நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த் தேநீரில் இரத்தமாய் முகமற்றுப் போனோரே கவனித்தீர்களா? பனிப் படலங்களை ஊடுருவும் எக்காள ஒலிகள். சிங்கத்தின் வாள் இனி உடைபடக்கூடும். அதோ. வயல்வெளி எங்கும் தலை நிமிரும் நெற்பயிர்கள். வசந்தன் கூத்தின் நாயகர்கள் ஆட்டம். இவனோ நண்பன். பனைகள் மறைக்கும் செம்மண் பரப்பு. பனங்காட்டுச் சலசலப்பு. ஓலைகள் உராய்வினில் அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால் அலைகளின் சீற்றம், முரல்களின் துள்ளல். அம்பாப் பாடல்களில் சோகம் தொலைக்கும் ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியே பாய்கின்றன” அப்புறமென்ன! அடர்ந்த மலைகளின் இருட்டினில் இருந்து தேநீர் கரங்களில் விலங்குகள் கழற்று. பனி மலைகளின் உச்சிகள் பிளந்து கலவியைத் தொடங்கு, சக்தியை உமிழ், உழுத்த மாளிகையின் இடுக்குகள் எங்கணும் ஆலம்விதைகள். நம்பிக்கையுடன் எழு. . . . -கி.பி. அரவிந்தன்

கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 : புலவர் பழ.தமிழாளன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 June 2022         No Comment கரையான் புற்றுக்குள் கருநாகம் – 2 தில்லைமரம்  நிறைந்ததினால்  தில்லை      யென்ற பெயரோங்கும் இடமும் ஆகிச்   செந்தமிழர்  போற்றுகின்ற சிவனாகும்           நடராசர்  கோவி  லுக்குத் தொல்தமிழ  இனம்வந்த முதற்பராந்த        கமன்னென்பார்  பொன்னும்  வேய்ந்தார் /    புதுக்கோட்டை  மாமன்னர்  சேதுபதி           மரகதக்கல்  ஈந்து   மகிழ்ந்தார் // கொல்லைப்புற  வழியாக  உட்புகுந்த          தீச்சிதரும்  உரிமை  கோரல் /     கருநாகம்  கரையான்புற்  றுரிமை          தனைக்   கோருகின்ற  நிலையே ஒக்கும்  // வல்லடியாய்  வழக்காடு  தீச்சிதரை          வாலிறைவன்  கோவில்  விட்டே /     வளர்தமிழ  நாட்டரசு  வெளியேற்றி         மீட்டெடுத்தல்  வேண்டும் ! வேண்டும் !                 புலவர் பழ.தமிழாளன் ,        இயக்குநர்-பைந்தமிழியக்கம் ,                     திருச்சிராப்பள்ளி. (காண்க: கரையானின்   புற்றிற்குள்     கருநாகப்  படையெடுப்பா ! ?)

பேரறிஞர் அண்ணாவின் ஏ, தாழ்ந்த தமிழகமே!

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 June 2022         No Comment ஏ ,  தாழ்ந்த   தமிழகமே ! 1/8 [1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு.] புரட்சியின் சிகரம் தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!! மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் ( பாரதிதாசன் ) ஒரு பேராசிரியருக்கும் (பேராசிரியர்  கா. சு. பிள்ளை ) சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்துகொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்; பல வேலையின் காரணமாக நான் வரத்தவறியதால் முடியவில்லை; அதற்கு மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய தோழர்  தண்டபாணி  அவர்கள் பலபடச் சொல்லிட்டார். அவர் என்னைப் புரட்சியின் சிகரம் என்றார். புரட்சி இவ்வளவு குள்ளமாயிராது. புரட்சியின் சிகரம் என்றால் அது இங்கே அமர்ந்து இருக்கும் அறிஞ

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 56

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 June 2022         No Comment ( மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  55 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 20 தொடர்ச்சி அவள் துன்பப்பட்டிருக்கிறாள்! பொறுப்புகளைச் சமாளித்திருக்கிறாள். வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லாவிதமான துன்ப நாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக் கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை. கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து ‘மருந்து சாப்பிட வேண்டிய நேரம்’ என்று நினைவுபடுத்திய போது தான் பூரணி இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தாள். மதுரையில் அவள் உடல்நிலையைப் பரிசோதித்துக் காற்று மாற வேண்டுமென்று கூறிய மருத்துவர், ஏதோ ‘ டானிக் ‘குகள், மாத்திரைகள் எல்லாம் நிறையக் கொடுத்து அனுப்பியிருந்தார். பழங்கள், காய்கறி, கீரை, காய்ச்சின பால் எல்லாம் நிறையச் சாப்பிட வேண்டுமென்பதும் அவர் கூறி அனுப்பியிருந்த அறிவுரை. மருத்துவர் அறிவுரைகளுக்கு ஏற்பப் பூரணியைக் கவனித்

திருவள்ளுவர் அகப்பொருள் நெறி : நூலாய்வுக் கட்டுரை – 3/4 – வெ.அரங்கராசன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 June 2022         No Comment ( திருவள்ளுவர் அகப்பொருள் நெறி நூலாய்வுக் கட்டுரை – 2/4 தொடர்ச்சி) முனைவர்   கு . மோகனராசின்   திருவள்ளுவர்   அகப்பொருள்   நெறி நூலாய்வுக் கட்டுரை – 3/4             இம்முப்பொருள்களும் கீழ்க்காணும் 2 வகைப்பாடுகளில் வழங்கப்பட்டுள்ளன.            முதல் பொருளும் கருப்பொருளும் 13 வகைகளில் வழங்கப் பட்டுள்ளன. அவை 1 முதல் 13 தலைப்புகளில் அமைந்துள்ளன. அவை: 1.அறிமுகம்                     2. காமம் 3.பாடல் வடிவம்               4.திணைப் பகுப்பு 5.நாடக வழக்கு               6.அகப்பொருள் தலைமக்கள் 7.பெயர்  வரும் முறைமை  8.கூற்று முறைமை 9.நிலம்                          10.பொழுது             11.பிரிவு [பொது]              12.களவு       13.ஐயங்கள் உரிப்பொருள்கள் 24 வகைகளில் வழங்கப்பட்டுள்ளன.           இவை 14 முதல் 37 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன. அவை காமத்துப்பாலில் உள்ள 24 தலைப்புகள். இந்த 37 தலைப்புகளும் நூலின் அகக்கட்டமைப்பியல் முறைமை என்னும் பகுதியில் மொழியப்பட்டுள்ளன. 9.0.0.0. ஆய்வுப் போக்கியல் முறைமை :             250 குறட் பாக்க