திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – பேராசிரியர் வெ.அரங்கராசன்
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2020 கருத்திற்காக.. திருக்குறளும் மாறாத விழுமியங்களும் — அமைதி எல்லோரும் அமைதிஉற்று நல்வாழ்வு வாழ்ந்திடல் வேண்டும் என்னும் நல்லெண்ணம் அல்லால் வே[று]ஒன்[று] அறியேன் வள்ளுவப் பெருமானே….! 1.0.0.நுழைவாயில் இன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் பழுதற அமைய வேண்டும் என ஐ.நா.அவையின் ‘ யுனெசுகோ’ அறிவுறுத்துகின்றது; வலியுறுத்துகின்றது. உலக மக்களின் வாழ்க்கையின் ஆழத்தையும் உயரத்தையும் நீளத்தையும் அகலத்தையும் அணுகி, நுணுகி, ஆழ்ந்து, கூர்ந்து, அலசி ஆராய்ந்தவர் திருவள்ளுவர். அவர் தனிமனிதர்களிடம் குடும்பங்களில் சமுதாயங்களில் நாடுகளுக்குள் உலக நாடுகளுக் கு இடையில் அமைதியும் நல்லிணக்கமும் அரும்பி, மலர்ந்து, மணக்க வேண்டும் எனப் பெரிதும் விழைந்தவர். அவற்றிற்கு உரிய விழுமியங்களை எல்லாம் திருவள்ளுவர் அழகுறத் திருக்குறளில் பதிவு செய்துள்ளார். 2.0.0. அமைத