Posts

Showing posts from October, 2021

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 11/17

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 November 2021         No Comment (தனித்தமிழ்க் கிளர்ச்சி  : 10/17 தொடர்ச்சி)   தனித்தமிழ்க்   கிளர்ச்சி  : 11/17   தடமொழியாம் நம்முடைய தமிழ்ப்போர்வை தாம்போர்த்தி வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றார் அம்மானை வடமொழியைச் சிலமனிதர் வளர்க்கின்றா ரெனிலவர்கள் படையின்றிச் சூழ்ச்சியால்நம் பதவிகொள்வார் அம்மானை பதவிகொள இனிவிடின்நாம் பதராவோம் அம்மானை       (51) கடல்சூழும் இவ்வுலகில் கவினியநம் தமிழர்க்கு உடல்பொருள் ஆவிகள் ஓண்தமிழே அம்மானை உடல்பொருள் ஆவிகள் ஓண்டமிழே யாமாயின் அடல்வேண்டும் தமிழை அழிப்பவரை அம்மானை அடல்தவறாம் இனிஅவரே அழிந்திடுவார் அம்மானை       (52) தமிழ்நாட்டில் தமிழையே தாய்மொழியாக் கொண்டசில தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றார் அம்மானை தமிழரே முன்தமிழைத் தாழ்ந்ததென்றா ராமாயின் தமிழ்க் குருதி அவர்க்கில்லாத் தன்மையேன் அம்மானை குருதி வட நஞ்சுதீண்டக் குலைந்ததுகாண் அம்மானை       (53) இடையிற்பல் லாண்டுகளாய் இன்னலுற்ற தமிழரினி வடவர்க்கு அடிமைசெயும் வகைகொள்ளார் அம்மானை வடவர்க்கு அடிமைசெயும் வகைகொள்ளா ராமாயின் வடவரோ டொன்றிநாம் வாழ்வதெங்ங்ன் அம்மானை ஒன

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 8

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         31 October 2021         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 7. தொடர்ச்சி) குறிஞ்சி   மலர் அத்தியாயம்  3   “ஓடுகின்றனன் கதிரவன் அவன்பின் ஓடுகின்றன ஒவ்வொரு நாளாய் வீடுகின்றன என்செய்வோம் இனி அவ் வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே”       -நற்றிணை விளக்கம் துன்பங்களையும் தொல்லைகளையும் சந்திக்கும்போதெல்லாம், பூரணியின் உள்ளத்தில் ஆற்றல் வாய்ந்த தெளிவான குரல் ஒன்று ஒலித்தது. “தோற்று விடாதே? வாழ்க்கையை வென்று வாகை சூடப் பிறந்தவள் நீ. துன்பங்கள் உன் சக்தியை அதிகமாக்கப் போகின்றன. மனிதர்களின் சிறுமைகளையும் தொல்லைகளையும் பார்த்துப் பார்த்து உன் ஞானக் கண்கள் மலரப் போகின்றன. குப்பைகளையும் இழிவும் தாழ்வுமான நாற்றக் கழிவுப் பொருள்களையும் உரமாக எடுத்துக்கொண்டு மணமிக்கப் பூவாகப் பூத்து தெய்வச் சிலையின் தோளில் மாலையாக விழும் உயர்ந்த பூச்செடி போல்  ஏழ்மையும் துன்பமும் உனக்கு உரம் கொடுத்து உன்னை மணம் கமழ வைக்கப் போகின்றன.  நீ வாழ்க்கை வெள்ளத்தோடு இழுபட்டுக் கொண்டு போகும் கோடி கோடிப் பெண்களில் ஒருத்தி அல்லள்.  பெண்ணில் ஒரு தனி வாழ்க்கை நீ; வாழ்க்கையில் ஒரு தனிப

திருமணம் குறித்துத் தந்தை பெரியார் சிந்தனைகள் : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 October 2021         No Comment ( தந்தை   பெரியார்   சிந்தனைகள்  17  இன்   தொடர்ச்சி ) தந்தை   பெரியார்   சிந்தனைகள்  18 2 . திருமணம் வழக்கமாக நடைபெறுவது: (1)  திருமணம் என்பது -வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்றால் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் சேர்ந்து உலக வாழ்வு வாழ்வதற்காக ஏற்படுத்திக் கொள்ளுகிற ஒப்பந்தம் (contract) என்பதாக இருக்க வேண்டுமே தவிரத் திருமணம் என்றால்  ஆண் வீட்டாருக்குச் சம்பளம் இல்லாமல் வெறும் சோற்றுச் செலவோடு மட்டுமே ஒரு வேலைக்கு ஆள் (பெண்) சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது. (2)  ஆணும் பெண்ணும்  கூடி வாழ்வதுதான் வாழ்க்கை. வாழ்க்கை நடத்த ஆணும் பெண்ணும் – உற்ற துணைவர்கள் ஆவார்கள் என்பதைக் குறிப்பதுதான் ‘வாழ்க்கைத் துணை’ என்பதாகும். வாழ்க்கை என்பது  சுதந்திர  இன்பவாழ்க்கையே ஒழியக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட துன்ப வாழ்க்கையல்ல. (3)  திருமணமானவள்  என்பதைக் குறிப்பதாகப் பெண்ணுக்குத் தாலி கட்டப் பெறுகின்றது. திருமணம் ஆனவன் என்பதைச் சுட்ட ஆணுக்கு எந்தவித அடையாளமும் இல்லை. இது தவறு. ஆண்பெண் இருவரும் சமம் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் த

அரசியல் புதிய நிலைமைகள் தாக்கம் இலக்கியத்திலும் எதிரொலித்தது

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 October 2021         No Comment (முன்னிதழ்த் தொடர்ச்சி) இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் 4 சி. மௌனகுரு, மௌ. சித்திரலேகா & எம். ஏ. நுஃமான் அத்தியாயம் 3 ஈழத்துத் தமிழிலக்கியத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு தனித்து ஆராயப்பெறும் தகுதிகள் கொண்டது.   வரலாற்றைப் பொறுத்தவரையிலும் பல முதன்மையான நிகழ்ச்சிகள் இந்நூற்றாண்டில் நடைபெற்றன. 1802ஆம் ஆண்டு இலங்கை பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்றநாடானமை, 1831ஆம் ஆண்டு இலங்கைக்கு முதலாவது அரசியற் சீர்திருத்தம் வழங்கப்பட்டமை,   சுதேசிகள்   இலங்கையரசியலிற் பங்குபற்றும் நிலையேற்பட்டமை, ஆங்கிலக் கல்வி நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டமை, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டமை, நாட்டின் பல்வேறுபகுதிகளையும் இணைக்கும் வண்ணம்   தபால் தந்தி ச் சேவைகளும் பெருந் தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை முதலியன இலங்கை வரலாற்றுக்குப் புதிய தோற்றத்தையளித்தன. சமூக வகுப்புகளிடையேயும் புதிய அம்சங்கள் தோன்றின. புதிதாக ஆங்கிலக் கல்வி கற்க அரசாங்க சேவையில் ஈடுபட்ட மத்தியதர வருக்கமொன்று தோன்றியது.   இவ