Posts

Showing posts from January, 2023

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27

Image
 அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         29 January 2023         ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி ) ‘பழந்தமிழ்’ 7. பழந்தமிழ் நிலை    தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம்.  ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே  ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன . ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன என்பது ல்+ந சேருங்கால்  தோன்றக் காண்கின்றோம். புல்+நீர்=புன்னீர்.    ஐ, ஔ என்பவற்றை உயிர் எழுத்துகளின் கடைசியிலும், ற, ன, என்பவற்றை மெய்யெழுத்துகளின் கடைசியிலும் வைத்துள்ளமை இவ் வெழுத்துகளின் தோற்றக் காலத்தின் பிற்பட்ட தன்மையை அறிவிப்பதாகும். ஆயினும் தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே இவை தோன்றி எழுத்து வரிசையில் இடம்பெற்றுவிட்டன என்பதில் ஐயமில்லை.   தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு பன்னிரண்டு உயிரும், பதினெட்டு மெய்யும் நெடுங்கணக்கில் இருந்துள்ளன. மொழி வழக்கில் காணப்படு

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):23

Image
 அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         28 January 2023         (ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22. தொடர்ச்சி) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23 4. குலமும் கோவும்  தொடர்ச்சி அழகிய பாண்டியன்       பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய  ஆய்  என்பவனை வென்று மேம்பட்ட அப் பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பெருட்டு அம் மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு  அழகிய பாண்டியபுரம்  என்று பெயரிட்டான் என்பர். 24 சேந்தன்      ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில் அரசாண்டவன் சேந்தன் என்னும் செழியன். அவன் சிறந்த வீரனாகவும், செங்கோல் வேந்தனாகவும் விளங்கினான் என்பது  ‘சிலைத் தடக்கைச் செழியன்’என்றும், ‘செங்கோல் வேந்தன்’ என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுதலால் அறியப்படும். சேந்தமங்கலம் என்ற ஊர் பாண்டி நாட்டில் உண்டு. கோச்சடையன் திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்திருந்த பாண்டியன்,  அரிகேசரி மாறவர்மன் . 25  அவனுக்குப்பின் அவன் மகனாகிய கோச்சடையன் அரசனாயினான். நாற்பதாண்டுகள் அரசு வீற்றி

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 2

Image
  அகரமுதல ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         26 January 2023         (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 1 தொடர்ச்சி ) பன்னீர்   செல்வத்தின்   புதிய   புரட்சிக்கவி :  களம்  : 3   காட்சி  : 2 அமுதவல்லி – உதாரன் அறுசீர் விருத்தம் அமுதவல்லி   :          கவிதை          யாக்கும்                  மரபெல்லாம்                                       கன்னித்                   தமிழின்              நிலைகொண்டு                              குவியும்                  படியாய்                  எனதுள்ளம்                                       குறித்தீர்                   என்றும்                   என்நன்றி                              புவியோர்                போற்றும்                இலக்கியங்கள்                                       பொருந்தும்              மரபைச்                  சொல்வீரேல்                              கவியோர்                 நெஞ்சின்                 போக்குணர்ந்து                                       கவிதை          சுவைத்தல்               எளிதாமே உதாரன்  :