Posts

தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! – பழ.தமிழாளன்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         19 April 2024        அகரமுதல தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத  இன்னல்  தரும் ! 1 சீரார்க்கும்   எண்ணமுடன்  திகழ்கதிராம்                 எழுச்சிநிறை  உணர்வே  பெற்றுச்      செந்தமிழை  இனம்நாட்டை நெஞ்சகத்தே          வைப்பவரைத்  தேரல்   வேண்டும் ! தேராதே  கட்சியையும்  தேர்தலிலே  நிற்ப                           ரையுந்  தேர்ந்தெ  டுத்தால்        தீராத  இன்னலையே  இருகையால்          வணங்கியுமே  அழைத்தல்   ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி                               ரைச்   செகுத்தல்  போல        குடியாட்சி  மாண்பழிக்கும்  கட்சிக்கே                 வாக்கினையே  அளிப்போ  மாயின் ஏரார்த்த  தமிழ்மரபும்  எழிற்றமிழும்  பண்                                         பாடும்  நாடும்   வீழும் !       என்றென்றும் தமிழறமும் இனமொழியும்                         நிற்கதமிழ்ப்   பற்றார்   தேர்க   ! 2. தேர்தலுமே  வந்துவிட்டால்  திருக்குறளைச்                       செந்தமிழைக்  காப்பார்  போல        தேராதே  நெஞ்சகத்தில்  திகழ்கின்ற                 

வள்ளுவர் சொல்லமுதம் 16: அ. க. நவநீத கிருட்டிணன்: ஊக்கமும் ஆக்கமும்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         19 April 2024        அகரமுதல (வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்-தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் கக. ஊக்கமும் ஆக்கமும் வினை செய்தற்கண் கொள்ளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் எனப்படும். ஊக்கமே வாழ்வில் உயர்வைத் தருவது. ஆதலின் ‘ ஊக்கமது கைவிடேல் ‘ என்று ஓதுவார் தமிழ் மூதாட்டியார். ஊக்கம் உடை யவர் எல்லாம் உடையவர் என்றே சொல்லப் பெறுவர்.  ஊக்கம் இல்லாதவர் என்னுடையரேனும் இலர் என்பர் வள்ளுவர் . – ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைபெற்ற செல்வம். பிற செல்வங்களை இழப்பினும் ஊக்கத்தின் உறுதுணையால் அவற்றைப் பெறலாம். ஊக்கம் இல்லாதார் பெற்ற செல்வத்தைக் காக்கும் திறனின்றி இழப்பர்.  ஊக்கம் உடையார் கைப்பொருளை இழந் தாலும் “ஐயோ! செல்வத்தை இழந்தோமே!@ என்று சிந்தை வருந்தார் . வினை செய்யுங்கால் விளையும் இடை யூறுகள் பலவாயினும் அவை கண்டுமனம் வெதும்பார்  சகடம் ஈர்க்கும் பகடுபோல ஊக்கமுடன் செயலாற்ற வல்லாரை வந்துற்ற துன்பமே துன்பப்படும் என்பர் தெய்வப் புலவர்.  – அயலூர்க்கு வழி அறியாதார் அறிந்தார்பால் வழி வினவிச்சென்று சேர்வார் அன்றோ! அது போல இடர்

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 45 : நாவலர் ஆறுதல் உரை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         17 April 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 44 : திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை – தொடர்ச்சி) பூங்கொடி நாவலர் ஆறுதல் உரை எறிபெருங் கல்லால் இடர்பெரி துற்றேன், எனினும் பின்னர் என்னுரை விழைவோர் 25 நனிபெரு கினரால் நயந்திவண் இருந்தேன்’ நாவலர் ஆறுதல் உரை எனுமுரை கேட்ட இலக்கிய நாவலர் `அன்னாய்! உலகில் அறிவொளி பரப்ப முன்னுவோர்க் கெல்லாம் முதல்வர விதுவே; தொல்லைகள் பொறுத்துத் தொண்டுகள் ஆற்றின் 30 எல்லையில் இன்பம்; எடுத்தது முடியும்; வெற்றி வெற்றி விளைவது கண்டோம்; உற்றநின் துயரால் உளமது கலங்கேல் ஆற்றுக தொண்டே ஆற்றுக தொண்டே; நாவலர் தலைமேற் கல் நேற்றோர் அவையில் நிகழ்த்தினென் பேச்சு, 35 பொல்லாங் குடையார் புழுங்கினர் நெஞ்சம் கல்லார் நல்வழி நில்லார் புல்லார், குழப்பம் விளைத்துக் கூட்டங் கலைத்தனர், விளங்கொளி அவித்தனர் வீணர், ஒருசிலர் பாறைக் கல்லொடு பக்கம் வந்தனர், 40 வீரச் செயலென விழைந்தனர், தலைமிசை ஓங்கினர், அவ்வுழி உற்றொரு தோழர் தாங்கினர் அதனைத் தடுத்து நிறுத்தினர், தடுத்திரார் ஆயின் தலைதூள் ஆகும், உடலும் உயிரும் உலகுக் காக்கினென், 4

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         13 April 2024        அகரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன் – தொடர்ச்சி ) தமிழர் வீரம் அத்தியாயம் 8 பெண்ணை நாட்டுப் பெருவீரர் மலையமான் நாடு தமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம்  மலையமான்  என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும்,  மலாடு  என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள  திருக்கோவலூர்  அதன் தலைநகரம் 1 . வலிமை சான்ற  முள்ளூர்க் கானம் அதன் கோட்டை . காரியும் குதிரையும் மலையமான் குலத்தில் தோன்றினான்  காரி. அவன் நிகரற்ற குதிரை வீரன். அவன் குதிரைக்கும் காரி என்பது பெயர்.  அக் குதிரையின் திறமையால் பெரும் போர்களில் வெற்றி பெற்றான் காரி வீரன். அவன் உதவியை நாடினர் முடிமன்னர் மூவரும். 2  போர்க்களத்தை நோக்கி அவன்  குதிரையின்மேற் செல்லும்போது மண் நடுங்கும்; மாற்றார் மனம் ஒடுங்கும். ஓரியும் காரியும் கொல்லிமலை வீரனாகிய ஓரி க்கும், மலையமான் காரிக்கும் இடையே நாளடை

வள்ளுவர் சொல்லமுதம் 15: அ. க. நவநீத கிருட்டிணன்: பொருளும் அருளும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         12 April 2024        அகரமுதல (வள்ளுவர் சொல்லமுதம் 14: அ. க. நவநீத கிருட்டிணன்: நன்றி கொன்றவர்க்குக் கழுவாயில்லை- தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 10 பொருளும் அருளும் உலகில் மக்கள் எய்தும் உறுதிப் பொருள்கள் மூன்று. அவை அறம், பொருள், இன்பம் என்பன இம் மூன்றனுள் பொருளே அறத்தைப் புரிதற்கும் இன்பத்தை பெறுதற்கும் இன்றியமையாது வேண்டப்படும். “பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்பது நம் பொய்யில் புலவரது பொன்னான மொழி. வடுவிலா வையத்து மன்னிய மூன்றுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்று நாலடியார் நவிலும். சீரிய வழியில் தேடிய செல்வம் படைத்தோர் சிறந்த அறத்தைச் செய்யலாம். உலகில் நிறைந்த இன்பத்தை அடைந்து மகிழலாம். இவை இரண்டும் அவர்க்கு எளியவாய் அமையும். இதனையே திருவள்ளுவர் பெருமானும், ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்(கு) எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு என்று வலியுறுத்துவார். அறநெறியால் வரும் பொருளையே ஒண்பொருள் என்று குறிக்கின்றார், அறநெறியில் ஈட்டிய செல்வமே ஒருவற்கு இன்பத்தையும் புகழையும் எய்துவிக்கும். தீய வழியில் தேடிய செல்வம் பழியும் பாவமும் பயந