தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! – பழ.தமிழாளன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 19 April 2024 அகரமுதல தக்கவர்க்கு வாக்களிப்பீர் தேராச் செய்வினை தீராத இன்னல் தரும் ! 1 சீரார்க்கும் எண்ணமுடன் திகழ்கதிராம் எழுச்சிநிறை உணர்வே பெற்றுச் செந்தமிழை இனம்நாட்டை நெஞ்சகத்தே வைப்பவரைத் தேரல் வேண்டும் ! தேராதே கட்சியையும் தேர்தலிலே நிற்ப ரையுந் தேர்ந்தெ டுத்தால் தீராத இன்னலையே இருகையால் வணங்கியுமே அழைத்தல் ஒக்கும் ! கூரான வாளெடுத்துக் கூடியுள்ள தம்முயி ரைச் செகுத்தல் போல குடியாட்சி மாண்பழிக்கும் கட்சிக்கே வாக்கினையே அளிப்போ மாயின் ஏரார்த்த தமிழ்மரபும் எழிற்றமிழும் பண் பாடும் நாடும் வீழும் ! என்றென்றும் தமிழறமும் இனமொழியும் நிற்கதமிழ்ப் பற்றார் தேர்க ! 2. தேர்தலுமே வந்துவிட்டால் திருக்குறளைச் செந்தமிழைக் காப்பார் போல தேராதே நெஞ்சகத்தில் திகழ்கின்ற