Posts

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26

Image
  ஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         18 March 2023        அகரமுதல ( ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 25. தொடர்ச்சி ) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):26 4. குலமும் கோவும் தொடர்ச்சி                     சோழ நாட்டு மன்னர்  விசயாலயன்      பல்லவர் ஆட்சி நிலை குலைந்தபோது தஞ்சைச் சோழர் குலம் தலையெடுத்தது. வடக்கே சாளுக்கிய மன்னரும், தெற்கே பாண்டியரும் பல்லவ வேந்தனை நெருக்கிக் குழப்பம் விளைத்த காலம் பார்த்து விசயாலயன் என்னும் சோழன் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைக் கைப்பற்றினான். அது முதல் அவன் மரபில் வந்த தஞ்சைச் சோழர்கள் படிப்படியாக வளர்ந்தோங்கிப் பேரரசர் ஆயினர், விசயாலயன் பெயர் தாங்கிய ஊர் ஒன்றும் இல்லை யென்றாலும் புதுக்கோட்டையைச் சார்ந்த நாரத்தா மலை மீதுள்ள விசயாலய சோழீச்சரம் என்னும் கற்கோயில் அவன் பெயரால் அமைந்ததென்பர். 52 ஆதித்தன்      விசயாலயனுக்குப் பின்பு அவன் மகன் ஆதித்தன் அரசுரிமை பெற்றான். ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லவர் பெருமைக்கு உறைவிடமாயிருந்ததொண்டை நாடு இவன் கால முதல் சோழர் ஆட்சியில் அமைவதாயிற்று. இராச கேசரி என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. தஞ்சை நாட்டுப் பண்

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30

  ஃஃஃஃ   இலக்குவனார் திருவள்ளுவன்         17 March 2023        அகரமுதல ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 30   தமிழில் தொல்காப்பியர் காலம்வரை  இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு, கின்று, ஆநின்று ஆகிய இடைநிலைகள் பழந்தமிழில் பயின்றிடக் காணோம்.   தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களையும் ஒருமை பன்மைகளையும்,அறிவிக்கும் விகுதிகளைத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.   தன்மைப் பன்மையை அறிவிப்பன  அம், ஆம், எம், ஏம், கும், டும், தும், லும், என்பனவாம்.   தன்மை ஒருமையை அறிவிப்பன கு, டு, து, று, என், ஏன், அல் என்பனவாம்.   படர்க்கையில் உயர்திணைப் பன்மையை அறிவிப்பன அர்,

தமிழ்நாடும் மொழியும் 30: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசாமி

Image
  ஃஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         16 March 2023        அகரமுதல (தமிழ்நாடும் மொழியும் 29:  பிற்காலப் பாண்டியர் வரலாறு   தொடர்ச் சி) 8 .  பிறநாட்டார்   ஆட்சிக்   காலம் மு ன்னர்க் கூறியபடி பாண்டியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்னர் வடக்கிருந்து  முகமதியரும், அவரை எதிர்த்த விசய நகர மன்னரும், மராட்டியரும் தமிழ் நாட்டில் நுழைந்து அதனைப் போர்க்களமாக்கி, ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்து சென்றனர் . நம் நாட்டில் நுழைந்த முகமதியர் கோவிலையும், குளத்தையும் கெடுத்து, நாட்டையும், நகரையும் பாழாக்கி, கிடைத்தவற்றை வாரிக்கொண்டு சென்றனர். அக்காலத்திலே விசய நகர வேந்தர் முகமதியர்களை முறியடிப்பதற்கு வீறுகொண்டு எழுந்தனர். மராட்டியரும் மார்தட்டி எழுந்தனர். அவர்கள் வீரமுடன் போரிட்டு ஓரளவு வெற்றியும் பெற்றனர். இதன்காரணமாய் விசயநகரத்தாரும், மராட்டியரும் தமிழ்நாட்டை ஆளுதற்குரிய வாய்ப்பைப்பெற்றனர். வடக்கே முகமதியருடைய வலிமை நாளுக்கு – நாள் வளர்ந்த காரணத்தால் தெற்கு நோக்கி வந்த மராட்டியர் செஞ்சிக்கோட்டை, தஞ்சாவூர் முதலிய இடங்களைக் கைப்பற்றி ஆட்சிபுரியலாயினர். இதே நேரத்தில் விசயநகர மன்னரும் கன்னியாகுமரி வரை

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 5

Image
  ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         15 March 2023        அகரமுதல ( பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 3 காட்சி : 4 தொடர்ச்சி ) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம்  : 3   காட்சி  : 5 சோலை   மேடை .  ஒருபால்   காத்திருக்கும்   உதாரன்   நிலவைக்   கண்டு   பாடத்   தொடங்கிய   வேளை ,  அமுதவல்லி   மறுபுறம்   வந்து   வியந்து   நிற்கிறாள் எண்சீர்   விருத்தம் உதாரன்   :                         நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலவென்று    காட்டுகிறாய் ஒளிமு கத்தைக் கோலமுழு     துங்காட்டி விட்டால்காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ வானச் சோலையிலே  பூத்ததனிப்                                                 பூவோ நீதான்                                                 சொக்கவெள்ளிப் பாற்குடமோ                                                 அமுத  ஊற்றோ                                       காலைவந்த     செம்பருதிக்                                                 கடலில் மூழ்கிக்                                                 கனல்மாறிக் குளிரடைந்த