திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 1.தமிழ்நாடு. 2. மொழி
ஃஃஃ அகரமுத ல இலக்குவனார் திருவள்ளுவன் 04 May 2026 (திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௬. தமிழ்நாடும் தமிழும் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் தமிழ்நாடு எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை 1.தமிழ்நாடு ஐந்தாயிரம் ஆண்டுகட்கு முன் இன்றுமுள்ள குமரிமுனைக்குத் தென்பால் குமரிக்கண்டம் என்றோர் பெருநிலப்பரப்பு இருந்தது. அஃது எழுநூற்றுக் காவதம் பரவியிருந்தது. இன்றுள்ள சுமத்ரா, சாவா, போர்னியோ தீவுகளும் இலங்கைத் தீவும், இலக்கத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், மடகாசுகர் தீவு ஆகியவையும் குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளே! குமரிக்கண்டம் ஐந்துமுறை கடற்கோள்களுக்கு ஆட்பட்டமையால் அழிந்து போயிற்று ; அங்குதான் முதல் மாந்தன் தோன்றினான்; அங்கு வாழ்ந்த மக்கள் நான்கு திசைகளுக்கும் சென்று குடியமரத் தொடங்கினர்; அவர்கள் பேசிய மொழி தமிழ்; அவர்களுள் ஒரு பிரிவினர், வடதிசை நோக்கிச் சென்று பனிமலை வரை வாழ்ந்தனர்; அவர்கள்தாம் திரவிடர்கள் (Dravidians) எ...