Posts

Showing posts from June, 2023

பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         28 June 2023        அகரமுதல (பூங்கொடி 3 – கவிஞர் முடியரசன்: பதிப்புரையும் முன்னுரையும் – தொடர்ச்சி) பூங்கொடி – கதைச் சுருக்கம் தமிழகம், எங்கும் விழாக் கோலத்துடன் பொலிந்தது; பொங்கற் புதுநாள் அனைவ்ர் உள்ளத்தையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. பகலும் இரவும் கலை நிகழ்ச்சிகள் சிறப் புற்றாேங்கின. ஆனல், அருண்மொழியும் அவள் மகள் பூங்கொடியும் இசையரங்கேற வாராமையால் ஊரார் பலவாறு பேசினர். இதனால் வருந்திய வஞ்சி, தன்மகள் அருண்மொழிக்குத் தேன்மொழி வாயிலாகச் செய்தி கூறியனுப்பினள். மலையுறையடிகளுடைய குறளகத்திற் சேர்ந்த அவள் இத் துறையையே வெறுத்து வாராது நின்றனள். அருண்மொழி தன் தோழியாகிய தேன்மொழியிடம் தன் கணவன் வடிவேல் படுகொலையுண்டதைக் கூற்க் கேட்டுக்கொண்டிருந்த பூங்கொடி தேம்பியழுதனள். அருண்மொழி, அவ்வழுகையை மாற்றப் பூங்கொடியைப் பூங்காவிற்கு அனுப்பினள். தோழியாகிய அல்லியும் உடன் சென்றாள். பூங்காக் காட்சிகளை இருவரும் கண்டுகளிக்கும் பொழுது பூங்கொடிமேற் காதல் கொண்ட கோமகன் அங்கு வருவதறிந்து, அஞ்சிய பூங்கொடி, ஆங்கிருந்த படிப்பகத்தினுட் புகுந்தாள். வெளியில் நின்ற அல

ஊரும் பேரும் 40 : இரா.பி.சேது(ப்பிள்ளை): ஆறும் குளமும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         24 June 2023        அகரமுதல ( ஊரும் பேரும் 3 9  :  மலையு ம்குன்று ம் – தொடர்ச்சி) ஆறும் குளமும்      ஆண்டவன் கோயில் கொண்டுள்ள ஆற்றுப் பதிகளை ஒரு பாட்டிலே அடுக்கிக் கூறினார் திருநாவுக்கரசர்.       “ நள்ளாறும் பழையாறும் கோட்டாற் றோடு        நலந்திகழும் நாலாறும் திருவையாறும்       தெள்ளாறும்” என்று அப் பெரியார் எடுத்த திருப்பாசுரத்தில் ஆறு பதிகள் குறிக்கப்படுகின்றன. அவற்றின் தன்மையை முறையாகக் காண்போம். திருநள்ளாறு      காரைக்காலுக்கு அண்மையில் உள்ளது திரு நள்ளாறு. நளன் என்னும் மன்னவன் ஈசனை வழிபட்டுக் கலி நீங்கப் பெற்ற இடம் நள்ளாறென்பர்.       “ வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி        நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய் நள்ளாறே ” என்பது தேவாரம். அதனால் சனி வழிபாடு அங்கு சிறப்புற நடைபெறுகின்றது. பழையாறு      முன்னாளில் பல்லாற்றானும் சிறப்புற்று விளங்கிய பதிகளுள் ஒன்று பழையாறாகும். சோழ நாட்டு அரசுரிமை யேற்கும் மன்னர், மகுடாபிசேகம் செய்து கொள்ளுதற்குரிய சிறந்த நகரங்களுள் பழையாறும் ஒன்றென்று சேக்கிழார் கூறுதலால் அதன் சீர்மை விளங்கும். 1  பிற்காலத்தில் முட

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 44 : பழந்தமிழும் தமிழரும் 4

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         23 June 2023        அகரமுதல (இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 43 : பழந்தமிழும் தமிழரும் 3 தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 4    பெண்களுக்கு அக்காலத்தில் எல்லா உரிமைகளும் இருந்தன . விரும்பிய கணவனை மணக்கும் உரிமையும் இருந்தது. மணவினைச் சடங்குகளும் நிகழ்ந்தன.  மணவினை நிகழ்வதற்கு முன்னர்ச் சிலம்புகழி நோன்பு  என்ற ஒரு சடங்கு நிகழ்ந்துளது. அது மணமகன் வீட்டிலோ மணமகள் வீட்டிலோ நடைபெறும். அச் சடங்கில்  புரோகிதர்களோ பொருள் விளங்கா மந்திரங்களோ இல்லை . பெண்களே நடத்தி வைத்தனர்.   அத் திருமணச் சடங்கு பற்றி  நல்லாவூர் கிழார்  கூறியுள்ளார்.              உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை             பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரைகால்             தண்பெரும் பந்தர் தருமணல் ஞெமிரி             மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்             கனை இருள் அகன்ற கவின்பெறு காலைக்             கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்             கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென             உச்சிக் குடத்தர் புத்துஅகல் மண்டையர்             பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்             முன்னவு

தமிழ்நாடும் மொழியும் 44 : சீர்திருத்தம்- அ.திருமலைமுத்துசாமி

Image
  ஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         22 June 2023        அகரமுதல (தமிழ்நாடும் மொழியும் 43 : . தமிழ் நெடுங்கணக்கும் பிறவும் – தொடர்ச்சி) சீர்திருத்தம் தமிழ் நெடுங்கணக்கு இத்தனை மாற்றங்களைப் பெற்ற போதிலும், இன்னும் முழுமையான உருவைப் பெறவில்லை. அதில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் சில உள. இன்று தமிழ் நெடுங்கணக்கிலே சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று கூறுவோரை இருவகைப்படுத்தலாம்.  தமிழையும், அதன் எழுத்தையும் சிதைக்கவேண்டும் என்ற தீய எண்ணத்தோடு ஒரு சாரார் தமிழ் நெடுங்கணக்கிலே திருத்தம் வேண்டும் என்கின்றனர்.  தமிழ் நெடுங்கணக்கு மேலும் அழகும் எளிமையும் பெறவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலே சிலர் சீர்திருத்தம் வேண்டும் என்கின்றனர். உயிர் எழுத்துகள் உயிர் எழுத்துகளிலே இகர நெடில் தவிர, ஏனைய வற்றின் நெடில் எல்லாம் குறிலின் வடிவத்தையே பெற்றுள்ளன. இகரத்தின் நெடில் மட்டும் வேறு வடிவம் ஒன்றைப்பெற்றுள்ளது. அதனால் நெடுங்கணக்குப் படிப்புக்குத் தடங்கல் ஏற்படும். எனவே ஏனைய நெடில்களைப் போலவே இகரநெடிலையும் ” “ என்று திருத்தி விடலாம்.அடுத்து ஐ, ஒள என்ற இரண்டு கூட்டொலி எழுத்துக்கள் உள. இவற்றிலே ஒள என்பதைச் சிலர