சுந்தரச் சிலேடைகள் 17 : பெண்மகளும் பெட்டகமும் – ஒ .சுந்தரமூர்த்தி
அகரமுதல 191, ஆனி 04, 2048 / சூன் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக.. சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை அணி 17 பெண்மகளும் பெட்டகமும் வாய்மூடிக் கொள்ளுமே, வாய்திறக்க முத்துதிர்க்கும் தூய்மை தனைநாடும், நல்சுமக்கும் – ஏற்புறப் பல்நிலை தானிருக்கும் பாதரு காரிகையே ! வெல்மகளும் பெட்டகமாய் வீடு. பொருள்: பெண் மகள்: | ) தேவைப்படும் நேரத்தில் அளவாகப் பேசிவிட்டு வாயை மூடிக் கொள்வர். 2) வாய் திறந்தால் வெண்முத்துகளாய்ப் பற்கள் ஒளிரும் . 3) தூய்மையாக இருப்பார்கள். 4) குடும்பப் பொறுப்பை உணர்ந்து குடும்பத்தைத் தாங்கும் தூணாக இருப்பர். 5) பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்று பல நிலைகள் கொண்டிருப்பர். பெட்டகம்: 1 எந்நேரமும் மூடியே இருக்கும். 2 வாய்(கதவைத் ) திறந்தால் உள்ளிருக்கும் அரும்பொருள் காட்டும் 3 . தூய்மையான ஆடைகளை உள்ளே வைத்திருக்கும். 4) உள்ளிருக்கும் பொருட்களைத் தாங்கும் . 5) பல அடுக்குகளைப் பெற்றிருக்கும். ...