Posts

Showing posts from March, 2023

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28

Image
  ஃஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         01 April 2023        அகரமுதல (ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27. தொடர்ச்சி)   ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):28   4. குலமும் கோவும் தொடர்ச்சி சனநாத சோழன்     இராசராசனுக்கு அமைந்த விருதுப் பெயர்களில் ஒன்றாகிய சனநாதன் என்பது அவனது அரசியற் கொள்கையைக் காட்டுகின்றது.        “குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்        அடிதழீஇ நிற்கும் உலகு ” என்னும் திருவள்ளுவர் கருத்துப்படி சனநாயகத்தின் உரிமையையும் பெருமையையும் இராசராசன் நன்றாக உணர்ந்திருந்தான் என்பது இவ்விருதுப் பெயரால் விளங்குவதாகும். தென்னார்க்காட்டிலுள்ள அகரம் என்னும் ஊர் சனநாத சதுர்வேதிமங்கலம் எனச் சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. 84  சனநாதநல்லூர் என்னும் மறுபெயர், சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள ஆடூருக்கும், தென் ஆர்க்காட்டைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் வயிரமேக புரத்துக்கும், செங்கற்பட்டு நாட்டைச் சேர்ந்த வாயலூர் என்னும் திருப்பில வாயிலுக்கும் வழங்குவதாயிற்று. 85 பட்டுக்கோட்டையிலுள்ள சோழபுரம் என்னும் மும்முடிச் சோழபுரத்தின் வழியாகச் சென்ற சாலை, சனநாதன் பாதை என்று பெயர் பெற்றது. 86 மது

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32

Image
  ஃஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         31 March 2023        அகரமுதல (இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி ) ‘ பழந்தமிழ்’  32  சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர்.  தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை,          முதலிற் கூறும் சினையறி கிளவியும்         சினையிற் கூறும் முதலறி கிளவியும்         பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும்         இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும்         வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ         அனைய மரபினவே ஆகுபெயர்க் கிளவி .         (தொல்காப்பியம்,சொல்.114) என்னும் நூற்பாவால் அறியலாகும்.   இவற்றை முதலாகுபெயர், சினையாகுபெயர், இடவாகுபெயர், பண்பாகு பெயர், காரண ஆகுபெயர், இரு பெயரொட்டு ஆகுபெயர், கருத்தா ஆகுபெயர் எனப் பிற்காலத்தார் பெயரிட்டழைத்தனர். இன்னும் அளவாகு பெயர், நிறையாகுபெயர், காரிய ஆகுபெயர் என்பவையும் உண்டு.   இவ்வாறு பல்வகையாலும் உருவாகிய சொற்கள் தொடராக அமைந்து பொருள் விளக்கம் தருவதிலும் சில மரபுகள் உள.   வி

தமிழ்நாடும் மொழியும் 32: பிறநாட்டார் ஆட்சிக் காலம் – பேரா.அ.திருமலைமுத்துசுவாமி

Image
  ஃஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         30 March 2023        அகரமுதல ( தமிழ்நாடும் மொழியும் 31:  பிறநாட்டார் ஆட்சிக் காலம்  தொடர்ச்சி ) 8.  பிறநாட்டார்   ஆட்சிக்   காலம்  தொடர்ச்சி மைசூர்   மன்னர்கள் மைசூர் மன்னர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் கி. பி. 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஏறத் தாழ 180 ஆண்டுகளில் மெல்ல மெல்லப் பரவிற்று. திருமலை நாயக்கர், சொக்கநாத நாயக்கர் என்பவர்கள் ஆட்கிக் காலத்தில் மைசூர் மன்னன்  காந்திர அரசனது படை  கோயம்புத்தூர், சேலம் மாவட்டங்களில் பல இடங்களை வென்று, திண்டுக்கல்வரை வந்து வாகை சூடிச் சென்றது. இவனுக்குப்பின் பட்டமேறிய  தொட்டதேவன்  காலத்தில் சேலம், தாராபுரம் முதலிய இடங்கள் மைசூருக்குச் சொந்தமாயின.  சிக்கதேவன்  என்பவன் அடுத்து அரசனாயினான். கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, பழனி, ஆனைமலை, குமாரபாளையம், தவளகிரி, பொள்ளாச்சி முதலிய இடங்கள் இவனுக்குச் சொந்தமாயின, மேலும்  சங்கரய்யா . என்பவன் கொங்கு நாட்டில் ஆட்சி நடத்த மன்னனால் அனுப்பப்பட்டான். இது நடந்த காலம் 18-ஆம் நூற்றாண்டின் இடைக்காலமாகும். இவன் அவினாசி, பவானி இவ்விடங்களிலுள்ள கோவில்களைப் புதுப்பித்தான்; பேரூ

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2

Image
  ஃஃஃஃ  இலக்குவனார் திருவள்ளுவன்         29 March 2023        அகரமுதல (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 1 தொடர்ச்சி ) ப ளிங்கு நீராழியில் அமுதவல்லியும் – அல்லியும் ; மற்ற தோழியர் கரையில் எண்சீர் விருத்தம் அமுதவல்லி:            அதோ            பாரடி            மயிலே                                       அதோ  பாரடி                                       மயிலின்        அழகு  பாரடி                              இதோ           பாரடி            இனிமை                                              இன்னும்        பாரடி                                       இருசிட்         டிணைதல்      பாரடி                              கொஞ்சம்                 பாரடி            கிளிகள்                                       கொஞ்சல்                பாரடி                                       அணிலும்                விரைதல்        பாரடி                              தஞ்சம்           நாமடி           இயற்கை                                       விஞ்சு           மாமடி