Posts

Showing posts from March, 2020

தந்தை பெரியார் சிந்தனைகள் 12: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 March 2020         No Comment தந்தை பெரியார் சிந்தனைகள் 12 ( தந்தை   பெரியார்   சிந்தனைகள்  11  இன்   தொடர்ச்சி ) கோயில்கள் :  உருவ வழிபாட்டின் விளைவாக எழுந்தவை திருக்கோயில்கள். மராமத்து செலவு அடிக்கடி ஏற்படும், எதிர் காலத்தில் இதனை எவரும் ஏற்காமாட்டார்களோ என்று எண்ணியே கல்லாலேயே கோயில்களைக் கட்டியுள்ளனர். (1)  இந்நாட்டில்   எத்தனைக்   கோயில்கள் ?  வைணவர்களுக்கு 108 திவ்விய தேசங்கள். யாவும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றவை; மங்களாசாசனம் செய்யப்பெறாத கோயில்கள் ஆயிரக்கணக்கானவை. சைவர்கட்குப் பாடல் பெற்ற தலங்கள் 274; வைப்புத்தலங்கள்-பாடல்களில் பெயர்கள் வைக்கப் பெற்றவை 233. இந்த இரண்டிலும் அடங்காதவை எண்ணற்றவை. பிள்ளையார் கோவில்கள் எத்தனை? ஆற்றங்கரை, அரச மரத்துப்பிள்ளையார்கள் எத்தனை? சாலையோரங்களில் நாடோறும் தோன்றி வரும் கோயில்கட்குக் கணக்கே இல்லை. இது பக்தி பெருகி வருவதற்கு அடையாளமா? என்று கேட்கின்றார் பெரியார். (2)  மதுரை   மீனாட்சி – சுந்தரேசுவரர்   கோயில் , காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில், இராமேசுவரத்திலுள்ள இராமநாதர் கோயில்- இவ

ஓய்வில் உற்சாகம் இல்லை! – ஆற்காடு க. குமரன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 March 2020         No Comment ஓய்வில் உற்சாகம் இல்லை! கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை ஊரடங்கில் கிடைத்த ஓய்வில் உற்சாகம் இல்லை தொற்றுநோய்மியை விட வேகமாய்த் தொற்றிக் கொண்ட பயம் பற்றிக்கொண்டதில்  தலை சுற்றுகிறது! எச்சம் கூட நஞ்சு என்று அச்சம் கொண்டோம் மிச்சமுள்ள உயிர் அற்பமாய்ப் பதறுது! இணையத்தோடு இணைந்திருக்க இல்லங்கள் சிறந்திருக்க அக்கம்பக்கம் தொடர்பில்லை வம்பு வழக்கு ஏதும் இல்லை அடங்கிக் கிடக்கிறோம்  முடங்கிக் கிடக்கிறோம் வதங்கி  மடிகிறோம்! ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா பாடிய பாரதியும்  பார்வையாளர் இன்றி தனித்திருக்கிறார் எண்ம இந்தியா வல்லரசாகும் இந்தியா எல்லாம் பெயரளவில்! இவண் ஆற்காடு க குமரன் 9789814114

காலத்தின் குறள் பெரியார் : 8 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 March 2020         No Comment (காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 8. பொதுவாழ்வு 1.அக்காலம் போலவே இக்காலம் இல்லென்பார்   எக்கா லமுமறி  யார். 2.புத்துலகு காணப் புறப்பட்டார்  ஈட்டுவது   நித்தமும் நிற்கும் புகழ். 3.வாழ்வாங்கு வாழ நமக்கோர் வழியுண்டா   சூழின் அதுபொது வாழ்வு.      4.பொன்னை இழந்து பொருளிழந்து தன்னை   இழக்கவைக் கும்பொது வாழ்வு. 5.செல்வமது கிட்டும் எனப்பொது வாழ்விற்குச்   செல்லா(து)  இருத்தல் சிறப்பு. 6.புதுவாழ்(வு) எதுவென்பார்க்(கு) என்றும் நிலைக்கும்   பொதுவாழ்வே என்று புகட்டு. 7.தான்வாழ வேண்டுமென வந்தாரை நீமறித்து   ஏன்வாழ வேண்டும் இயம்பு. 8.பொதுவாழ்வால் வாழ்விழந்தேன் என்பாரைச் சீறி   இதுநாவா என்றுமிழ் வாய்.         9.உடன்பிறந்தார் மட்டுமல்ல ஊருனைப் போற்றக்   கடன்செய் உனைமறந் தே.                                                     10.புத்துலகு தோன்றப் பொதுவாழ்வில் மாண்டவர்    செத்துமுயிர் வாழ்பவர் தான். ( தொ

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 6

Image
அகரமுதல இ லக்குவனார் திருவள்ளுவன்         27 March 2020         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார்: 5. தொடர்ச்சி)    அந்தச் சிற்றூருக்கு அலுவலர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; ஊரார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், “அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா?” என்பார்கள். “நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா? கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்” என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.     இந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் வந்திருந்தார். அவர் மாணவர்களின் திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வ

குடும்பத்தை இணைக்கும் மகுடை! – ஆற்காடு க. குமரன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         23 March 2020         No Comment குடும்பத்தை இணைக்கும் மகுடை! என் குடும்பத்தோடு என்னைக் கூட்டிக் கொடுத்தது அன்பைக் காட்டிக்கொடுத்தது இணையம் கூட இன்று வந்தது இணையும் குடும்பம் என்றும் நிலைப்பது! பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருந்தோம் பிணமாகப் போகிறோம் என்ற பயத்தில் பதுங்கிக் கிடக்கிறோம்! வருமுன் காப்போம் வந்த பின்னும் காப்போம் பகிராமல் கண்ணுக்குத் தெரியாத நோய்மி,  கடவுளையும் கடந்து கதவடைக்காமல் காற்றில் கட்டுப்பாடில்லாமல் விடியலில் எழுந்து விரைந்து கடந்து உழைத்துக் களைத்து உறவுகள் உறங்கிய பின்னே உடைந்து திரும்பி அடைந்து உறங்கி கடந்து கொண்டிருந்த நாம் விடியலை மறந்து தலையணையாய், தம் மகவுக்குக் கைகளையும் பஞ்சணையாய் தம்முடலையும் பதிக்கும். எத்தனைக் காலமானது இப்படி உறங்கி செப்படி வித்தையானது செய்த வினை நோய்மிகள்தாமே! தீதோ நன்றோ தீரட்டும் பிரிவினை பிணையட்டும் உறவுகள் பிணி தீரட்டும் பசலை வீடு நலம்பெற நாடும் நலம் பெறும் கேடும் கலைந்திடும் வாடும் நே

தந்தை பெரியார் சிந்தனைகள் 11: முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         22 March 2020         No Comment தந்தை பெரியார் சிந்தனைகள் 11 ( தந்தை  பெரியார்  சிந்தனைகள் 10  இன்  தொடர்ச்சி)  1)  சருவசக்தியுடைய   கடவுள்  ஒருவர் இருந்து, சருவத்திலும் புகுந்து சருவத்தையும் ஒன்று போலப் பார்ப்பவராக இருந்தால் சருவத்தையும் ஒன்றுபோலவே சிருட்டிக்கலாமல்லவா? [ குறிப்பு  1] . வேறு வேறாகக் காணப்படுவதாலேயே சர்வ சக்தியும் வியாபகமும் சமத்துவமும் கொண்ட கடவுள் என்பதாக ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை. (2)  கடவுள்   ச ரு வவியாபியாய்  இருக்கும்போதும், மனிதனுடைய காரியங்களையும் கவனித்து வருகின்றவராய் இருக்கும்போதும் மனிதனுக்குத் தனிப்பட்ட பிரார்த்தனை எதற்கு? அதற்காக இடம் பொருள் நேரம் எதற்காகச் செலவு செய்ய வேண்டும்? (3)  இன்றையநாள்   எத்தனைக்   கடவுளர்கள்  பணக்காரக் கடவுளாகவும், ஏழைக்கடவுளாகவும் உள்ளனர்? ஒரு கடவுளுக்குச் சோற்றுக்குக்கூட வழி இன்றிச் சொத்து ஒன்றும் இன்றி உள்ளது! மற்றொன்றுக்குப் பத்து  ஏக்கர்  நிலம், இன்னொன்றுக்கு நூற்றுக்கணக்கான  ஏக்கர்  நிலங்கள். இன்னும் ஆயிரம்  இலட்சக்   கணக்கான  மிகப்பணக்காரச் சாமியும் உள்ளத