Posts

Showing posts from July, 2020

சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் – நாக.இளங்கோவன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         13 July 2020         No Comment சங்கக் காலத்தில் நோய் தீரத் தனிமைப்படுத்தல் (Quarantining in Sangam Period) பேய்வேறு நோய்வேறு உண்டா?  பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள் . ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும். தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய்ச் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவன். மண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான். உடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும்? மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு. மாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கிப் பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத