Posts

Showing posts from March, 2019

திருக்குறள் சுட்டும் தீமைகள் – பேரரசி முத்துக்குமார்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         18 மார்ச்சு 2019         கருத்திற்காக.. திருக்குறள் சுட்டும் தீமைகள்    முன்னுரை       உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் உள்ள சில திருக்குறள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சில எடுத்துக்காட்டுகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களை விளக்கும் அதிகாரங்கள் 1.குற்றம் கடிதல் (44) 2.கூடா நட்பு (83) 3.சூது (94) இந்த மூன்று அதிகாரங்களில் இரண்டினைச் சிறிய விளக்கத்தோடு காண்போம்.      கூடா நட்பு என்பது மனமார இல்லாமல் வெளியுலகிற்கு நண்பரைப்போல் நடிப்பவரின் நட்பானது. இந்த நட்பானது ஒரு கேடு செய்வதற்குச் சரியான வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்தி நல்லவர்களைக் கெடுப்பதாகும். இவ்விளக்கமானது இரும்பைத் துண்டாக்கத் தாங்கு பலகை

ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று – நன்னாடன்

Image
அகரமுதல                இலக்குவனார் திருவள்ளுவன்         14 மார்ச்சு 2019         கருத்திற்காக.. ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று! அறமும் பிறவும் இனிமேல் அழகாய்க் கழுவேறும்  கொள்கையை விளக்க சிறு குறு கூட்டம் ஆர்ப்பரிக்கும்  சகலமானவருக்கும் சாராய விருந்து நிறைவேறும்  சாதியும் சடங்கும் சிறிது காலம் முன்னிலை பெறும்  பெயர் சூட்டலும் பிள்ளை கொஞ்சலும் பித்தமாக்கும்  காணும் போதெல்லாம் கனிவான விசாரிப்பு கடமையாகும்  மாவட்டம் வட்டம் ஒன்றியங்களைச் சந்திப்பது இயல்பாகும்  மந்திரிக்கு நாமே மகத்துவ மூலிகையாய்க் காட்சியளிப்போம்  தேர்தல் சந்தை முடியும் வரை விலையுள்ள  பொருளாய் நாளும் வலம் வருவோம்  திருவிழாவிற்குப் பின்னே  மழிக்கப்பட்ட தலையாய் மாறிவிடுவோம். _ நன்னாடன் – எழுத்து, 11.03.2019 

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         11 மார்ச்சு 2019         கருத்திற்காக.. [சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல் தளி என்றும் அதன்பின் தள்ளிவிழும் மழைத்துறல் துளி என்றும் வேறுபடுத்தி மழை நீரை (திவலை) உண்டு வாழும் வானம் பாடியானது நீரின்றி தேம்பினாலும் காவிரி பொய்க்காமல் நீர் வழங்கும் என்ற நுணுக்கம் சார்ந்த கருத்தியலை உணர்த்தும் செய்தியும், ‘‘ கொழுங்   காற்   புதலமொடு   செருந்தி   நீடி   “ எனும் பாட்டுத் தொகுதியில் மருதநிலத்தின் ஊர் புகுந்து முரண்பட்டோரை ஓடச்செய்து அவர்களது ஊர்களைப் பாழ்படுத்தியதால் நெல் விளைந்த கழனிகள் குவளை மலர்களோடு பிறமலர்கள் மலர்ந்திருந்த பொய்கைகளும் அழிய அதன்

எனக்குப் பிடித்த திருக்குறள்! – இரெ. சந்திரமோகன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         06 மார்ச்சு 2019         கருத்திற்காக.. எனக்குப் பிடித்த திருக்குறள்!      தமிழ்ச் சமுதாயம் நயத்தக்க நாகரிகம் வேண்டும் சமுதாயம்; “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று “ங” போல் வளைக்கும் சமுதாயம். அதன் ஒப்பற்ற பெருமையைப் பறைசாற்றும் நூற்களுள் மிகச்சிறந்தது தொல்காப்பியம், மற்றும் திருக்குறள் என்பது எனது கருத்து. மனித இனம் படிநிலை வளர்ச்சியில் உருவாகி, உடல் வலுவால் மட்டுமின்றி அறிவு ஆற்றலால் மேம்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்று வரும் வாழக்கைப் போராட்டத்தின் விளைவாக மிருகங்களிடம் இருந்து மேம்பட்டு, உயிரினங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் நிலைக்கு மனிதன் உயர்கின்றான். காலப்போராட்டத்தில் கருத்துக்களால் மேம்பட்ட சமுதாயமாக, உலகைக் காக்கும் சக்தியாக விளங்கும் சொற்களால் உருவான இலக்கியங்கள் கொண்டதால் “தமிழ்மொழி” செம்மொழி என்று உரைக்கப்படுகிறது.     எனக்குப் பிடித்த குறள், அனைவருக்கும் தெரிந்த ஒரு குறள். ஆயினும்  அதில் மறைந்திருக்கும் நுட்பமான பொருள்கள் என்னை அதிரவைக்கின்றன . அந்தக் குறள்.          “ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         04 மார்ச்சு 2019         கருத்திற்காக.. [சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:1/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘அரக்கு’பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப் பூச்சியும் ஒன்று. 1787 இல் சான்கேர் என்ற பிரெஞ்சு தேசத்து பூச்சியியல் அறிஞர் கண்டு பிடித்து அதன் வாழ்க்கைச் சுழற்சியை உலகிற்கு அறிமுகப்படுத்தியதாக அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. ‘காக்சிடே’ என்ற பூச்சிக் குடும்பத்தை சேர்ந்த அரக்குப் பூச்சியின் விலங்கியல் பெயர் இலேக்கிபர் இலேக்கா என்பதாகும்.  ஆனால் அரக்கு பற்றிய சங்கப்பாடல்களில் குறிப்பாக கலித்தொகையில் “பாலைக்கலி” பகுதியில் இடம் பெற்றுள்ள. ‘‘ வயக்குறு   மண்டிலம்   வடமொழிப்   பெயர்பெற்ற முகத்த