Posts

Showing posts from May, 2023

தமிழ்நாடும் மொழியும் 41 : பிற நூல்கள்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         01 June 2023        அகரமுதல (தமிழ்நாடும் மொழியும் 40 : தமிழ் இலக்கண வளர்ச்சி தொடர்ச்சி ) பிறநூல்கள் இலக்கணக் கொத்தும் இலக்கண விளக்கச் சூறாவளியும் இலக்கணக் கொத்து என்னும் நூல் கி. பி. 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  ஈசான தேசிகர்  எனப்படும் சுவாமிநாத தேசிகரால் இயற்றப்பட்டது. 151 சூத்திரங்களாலான இந்நூல் வேற்றுமை, வினை, ஒழிபு என்ற முப்பெரும் பிரிவுடையது. தொல்காப்பியத்தில் அருகிக் கிடந்த இலக்கண விதிகளையும், சில வடமொழி இலக்கணங்களையும், பல அரிய இலக்கணக் குறிப்புகளையும் நுட்பங்களையும் இந்நூல் கூறுகிறது.  இலக்கண விளக்கச் சூறாவளி என்பது இலக்கண விளக்கத்திற்கு மறுப்பு நூலாக கி. பி. 18 – ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவஞான முனிவரால் எழுதப்பட்டதாகும். நேமிநாதம், முத்துவீரியம் நேமிநாதமே சின்னூல் ஆகும். இது வெண்பாவால் ஆயது; எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் இவற்றைக் கூறுகிறது. இந்நூலாசிரியரது பெயர்  குணவீர பண்டிதராகும் . இவர் காலம் கி. பி. 12- ஆம் நூற்ருண்டு. முத்துவீரியம் என்பது  முத்துவீர ஆச்சாரியால்  இயற்றப்பட்ட மற்ருெரு இலக்கண நூலாகும். மறைந்த நூல்கள் அகத்தியம்,

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி

Image
  ஃஃஃ          இலக்குவனார் திருவள்ளுவன்         31 May 2023        அகரமுதல (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6 தொடர்ச்சி ) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி 6: தொடர்ச்சி உதாரன்:  அரசனுக்குப் பின்னிந்த தூய நாட்டை ஆளுதற்குப் பிறந்தவொரு பெண்ணைக் கொல்ல அரசனுக்கோ அதிகாரம் உங்க ளுக்கோ அவ்வரசன் சட்டத்தை அவம தித்தான் சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை அரசன்மகள் தன்னாளில் குடிகட் கெல்லாம் ஆளுரிமை பொதுவாக்க நினைத்தி ருந்தாள் அய்யகோ சாகின்றாள் அவளைக் காப்பீர் அழகியஎன் திருநாடே அன்பு நாடே வையத்தில் உன்பெருமை தன்னை நல்ல மணிநதியை உயர்குன்றைத் தேனை யள்ளிப் பெய்யுநறுங் சோலையினைத் தமிழாற் பாடும் பேராவல் தீர்ந்ததில்லை அப்பே

பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 6

Image
ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         30 May 2023        அகரமுதல (பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 5 காட்சி : 5 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி களம் : 5 காட்சி : 6 கொலைக்களம் – அதிகாரிகள், கொலைஞர், உதாரன், அமுதவல்லி, பொதுமக்கள் கலி விருத்தம் அதிகாரி:  சாவிலும் பிரியா இன்பம் காண ஆவிநீர் துறக்குமுன் அந்நாள் தொட்டுப் பூவுலக மரபினைப் போற்றும் படியாய் மேவுஞ் சொல்சில மேன்மையீர் சொல்வீர் எண்சீர் விருத்தம் உதாரன் :  பேரன்பு கொண்டோரே பெரியோ ரேஎன் பெற்றதாய் மாரேநல் லிளஞ்சிங் கங்காள் நீரோடை நிலக்கிழிக்க நெடும ரங்கள் நிறைந்தபெருங் காடாகப் பெருவி லங்கு நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின் நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில் புதுக்கியவர் யார்அழகு நகருண் டாக்கி சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறும் தேக்கியநல் வாய்க்காலும் வகைப்ப டுத்தி நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 36 – தேவும் தலமும்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         27 May 2023        அகரமுதல (ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 –   ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் தொடர்ச்சி )      5. தேவும் தலமும்     தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு. பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவனோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?     பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள்.  ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய காரணத்தால் ஆலமர் கடவுள் ஆயினார் . 1  முருகவேள் கடம்பமரத்தில் விரும்பி உறைதலால்  கடம்பன்  என்று பெயர் பெற்றார். 2  பிள்ளையார் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்.     காவிரிக் கரையில் அமைந்த நெடுஞ் சோலையில் ஒரு வெண்ணாவல் மரத்திலே ஈசன் வெளிப்பட்டார். 3  இன்னும், காஞ்சி மாநகரத்தில் இறைவன் மாமரத்தின் அடியிற் காட்சியளித்தார். அம்  மாமரமே கோயிலாய் ஏகாம்பரம் என்றும், ஏகம்பம் என்றும் பெயர் பெற்ற

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 40 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         26 May 2023        அகரமுதல ( இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 39 : பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொட ர்ச்சி) பழந்தமிழ்’ – 40 பழந்தமிழ்ச் சொல் அமைப்பு-தொடர்ச்சி   சில வேர்ச்சொற்களில் மூல உயிர் மாறுவதனால் சொல்வடிவம் வேறுபட்டுப் பொருள் வேறுபாட்டை  அறிவிக்கும் . குறில் நெடிலாகவோ, நெடில் குறிலாகவோ மாறுதலைடையும்.        மின் என்பது மீன் என்று ஆகியுள்ளது.        காண் என்பது கண் என்று ஆகியுள்ளது.        கெடு என்பது கேடு என்றும், உண் என்பது      ஊண் என்றும் வந்துள்ளமை காண்க.                தன்மை முன்னிலை இடப்பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்குங்கால் மூல உயிர் வேறுபடும்.   யான், என் என்றும் யாம், எம் என்றும், நீ, நின் என்றும், நீயிர், உம் என்றும் குறுகி வேற்றுமை உருபுகளை ஏற்கும். இவ்வாறு உயிர் குறுகுவதனால் சொல்லுவதில் ஆற்றலும் அழுத்தமும் பொருந்துகின்றன.        யானுகு என்பதைவிட எனக்கு என்பதும்        யாமுகு என்பதைவிட எமக்கு என்பதும்        நீக்கு என்பதைவிட நினக்கு என்பதும்        நீயிருக்கு என்பதைவிட நுமக்கு என்பதும் ஆற்றலும் அழுத்தமும் பெற்று விளங்குகின்றன அன்றோ!