Posts

Showing posts from July, 2021

இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 August 2021         No Comment   ( இலக்கியம்   கூறும்   தமிழர்    வாழ்வியல்  ( சங்கக்   காலம் )  13 –   தொடர்ச்சி ) இலக்கியம்   கூறும்   தமிழர்    வாழ்வியல்  ( சங்கக்   காலம் )  14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர்.  கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “ விலங்கொடு  மக்கள்  அனையர்  இலங்குநூல்   கற்றாரோடு  ஏனை  யவர் ”         ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும்.  அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “  உற்றுழி  உதவியும்  உறுபொருள்  கொடுத்தும் பிற்றைநிலை  முனியாது  கற்றல்  நன்றே பிறப்போ  ரன்ன  உடன்வயிற்  றுள்ளும் சிறப்பின்  பாலால்  தாயும்மனம்  திரியும் ஒருகுடிப்  பிறந்த  பல்லோ  ருள்ளும் மூத்தோன்  வருக  என்னாது  அவருள் அறிவுடை  யோன்ஆறு  அரசும்  செல்லும் வேற்றுமை  தெரிந்த  நாற்பா  லுள்ளும் கீழ்ப்பால்  ஒருவன்  கற்பின் மேற்பால்  ஒருவனும்  அவன்கட்  படுமே. ”     ( புறநானூறு  -183) திருக்குறட் பொருட்பாலி

இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 – சி.இலக்குவனார்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 July 2021         No Comment   (இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12–  தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  13 5.அரசு  (தொடர்ச்சி) அரசாள்வோன் மகன் அரசனாக அமரும் வழிமுறைக் கொள்கை பிற்காலத்தே நிலைத்துவிட்ட போதிலும் பண்டைத் தமிழகத்தில் அரசமரபு என ஒரு மரபு இருந்திலது. அரசாள்வோர் அரசர் எனப்பட்டனரே யன்றி அரசாளும் மரபிற் பிறந்தோர்க்குத்தான் அரசு உரியது எனக் கருதினாரிலர். வடநாட்டில் இராசனுக்குரியது இராச்சியம் எனக் கருதப்பட்டதேயன்றி ‘இராச்சியம்’ புரிவோன் ‘இராசன்’ என்று கொள்ளப்பட்டிலது.  அங்கு அரசாளுவதற் குரிய மரபு எனச் சத்திரியர் மரபு தோன்றியதுபோல் தமிழகத்தில் தோன்றிலது.  தமிழ்ச்சொல்லாம் ‘அரசன் ’ என்பதே வடமொழியில் ‘இராசன்’ ஆக உருப்பெற்றது.  சிலர் கருதுவதுபோல் ‘இராசன்’  ‘அரசன்’ ஆகவில்லை. ஆளும் முறையால் அரசர் எனப்பட்டோர் தாமே தம் உளம் சென்ற வழி நாட்டை ஆண்டிலர்.  ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரசர்க்குத் துணைபுரிந்தன.  புலவர்கள் அவ்வப்போது வேண்டும் அறிவுரை கூறி அறநெறி கோடாது ஆளும் முறையில் அரசரைச் செலுத்தினர்