Posts

Showing posts from September, 2022

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8

Image
 அகரமுதல * * *  இலக்குவனார் திருவள்ளுவன்         01 October 2022         No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம்‌  தொடர்ச்சி   சமுத்திரம்     சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன. 77  இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப் படுகின்றது. 78  எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை நாட்டில் அம்பா சமுத்திரம் முதலிய பல ஊர்கள் உள்ளன. அம்பாசமுத்திரத்தின்    ஆதிப்பெயர்  இளங்கோக்குடி  என்பது. 79  அவ்வூரின் அருகே எழுந்த குளம்  அம்பாள் சமுத்திரம்  என்று பெயர் பெற்றது. அப்பெயர் சிதைந்து  அம்பாசமுத்திரம்  ஆயிற்று.       முன்னாளில் ஏரியென்று பெயர் பெற்றிருந்த சில நீர்நிலைகள் இக் காலத்தில் சமுத்திரம் என வழங்குவதற்குச் சான்று சாசனங்களிற் காணப்படும் . தொண்டை நாட்டுத் தென்னேரி என

தமிழவள்! – மு. இராமச்சந்திரன்

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 September 2022         No Comment தமிழவள்! கொஞ்சிக் கொஞ்சி வளர்த்தார் தமிழர் குலக் கொழுந்தாக அன்னைத் தமிழை வஞ்சி வஞ்சி யெனவே அவளும் வளர்ந்தாள் அவளும் வளமாய் அறிவாய்!.. செஞ்சி செஞ்சி சீர்பெற அழகாய் செய்தனர் புலவர் கவியென வடிவாய் மன்னர் எழுந்தனர் மாதவள் செழிக்க மயக்கம் தீர்க்க சங்கம் பிறக்க… ஊரும் உலகும் அவள் பெயர் படிக்க உருண்டது காலம் பலர்வழி நடக்க… வளர்ந்தது சோலை ஆடலும் இனிக்க வந்து விழுந்தது இசையென முழக்க.. அணிந்தாள் அன்னை உடைபல உடுத்த அணிகலன் எடுத்து பதித்தனர் முத்தாய் பொன்னும் மணியும் எழுத்தென இருக்க எழுதினர் ஓலைகள் இன்தமிழ் நிலைக்க!.. பானை ஓடுகள் பகன்றின்று சிறக்க படிப்பும் அறிவும் ஒளிவிட வடிக்க..  வடித்தனர் கோயில் சிலைகள் நிற்பாய் வார்த்தனர் ஓவியம் சென்றன பிடிப்பாய்.. கற்களும் எழுதின உளிகளின் வடிப்பாய் கல்விக் கூடங்கள் தோன்றின அவளடி நடப்பாய்! படித்தவர் பாடினர் கவிதைகள் விதைப்பாய்!. பாரோர் கூட அவள் மடி சுமப்பாம்!.. அவள் மடி தவழ்ந்தவர் ஆடினர் களிப்பாய் அதன்வழி பிறந்தன கலைகளும் உவப்பாய்!. மண்ணென நிலைத்தெழ மருந்துவ சித்தர் மகிழ்வென பகிர்ந்

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 72

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 September 2022         No Comment ( குறிஞ்சி மலர்  71 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 26 குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.       — திருமந்திரம் அரவிந்தனும் பூரணியும் புகைப்பட நிலையத்துக்குச் சென்றிருந்தபோது வீட்டில் மீனாட்சிசுந்தரமும் மங்களேசுவரி அம்மாளும் அவர்கள் இருவரையும் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். “எனக்கு ஒன்று தோன்றுகிறது. என் பெண் வசந்தாவின் திருமணத்தை மட்டும் தனித் திருமணமாக நடத்துவதற்குப் பதிலாக அதே மண மனையில் இவர்களுக்கும் முடிபோட்டு இணைத்துவிட்டால் என்ன? இவர்களும் தான் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துவிட முடியும்? ஆக வேண்டிய நல்ல காரியம் காலா காலத்தில் ஆனால் தானே நன்றாக இருக்கும்? பூரணிக்கு வயதும் கொஞ்சமா ஆகிறது?” என்று மங்களேசுவரி அம்மாள்தான் முதலில் அந்த பேச்சைத் தொடங்கினாள். சரியான நேரத்தில் பொருத்தமாக அந்த அம்மாள் அதை நினைவுபடுத்துவதாகத் தோன்றியது மீனாட்சிசுந்தரத்துக்கு. அவர் ஒப்புக்

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.7.11 -1.7.15.

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         29 September 2022         No Comment (இராவண காவியம்: 1.7.6 -1.7.10. தொடர்ச்சி ) இராவண காவியம் தமிழகக் காண்டம்  7. கடல்கோட் படலம்         11.      கேட்டிடிற் காதுக் கின்பம் கிளந்திடின் நாவுக் கின்பம்                ஊட்டிடி னுளத்துக் கின்பம் உணர்ந்திடி னுணர்வுக் கின்பம்                பாட்டுரை நடையிற் செல்லும் பழந்தமிழ்ப் பாவாய் நீதான்                வீட்டிலா வின்ப மானால் விரும்பிடார் யார்தான் சொல்லாய்.         12.     அஎன வாயங் காக்கின் அன்னையுன் புலனா றைந்தும்                முக்கனி தேன்பால் கண்டும் முகஞ்சுழித் தினைந்தே யொல்கப்                புக்கெழீ யியல்பா யின்பம் புல்குசெந் தமிழ்நீ யானால்                அக்கறை யொடுநின் நச்சார் யாரினி தறைவா யம்மா.    13.     மன்னரைப் பாடி முன்னர் வண்டமிழ்ப் புலவர் பின்னர்த்                தன்னையா னாது பாடல் தகவில வினியம் மன்னர்                இன்னுயி ரெனவே போற்று மிருந்தமிழ் நாடு கொண்டு                மன்னனாய் வாழ வெண்ணி வளைகட லிருந்த தம்மா.         14.     தனித்தனிப் பொருளிற் றோய்ந்து தமிழொடு முரணி யாங்கே

உ.வே.சா.வின் என் சரித்திரம் 9

Image
  அகரமுதல * * *   இலக்குவனார் திருவள்ளுவன்         28 September 2022         No Comment (உ.வே.சா.வின் என் சரித்திரம், 8 இன் தொடர்ச்சி ) அத்தியாயம் 6 என் தந்தையார் குருகுலவாசம் “எப்போதும் சிவபக்தி பண்ணிக் கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைப்பிடிப்பதனால் இந்த அளவில் தமிழ்த் தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பியிருக்கிறேன். அவர் என் விசயமாக உள்ளத்தே கொண்டிருந்த கவலையை நான் முதலில் அறிந்து கொள்ளாவிட்டாலும் நாளடைவில் உணர்ந்து உருகலானேன். அவரிடம் எனக்கு இருந்த பயபக்தி வரவர அதிகரித்ததே யொழியக் குறையவில்லை. இளமையில் எனக்கு ஒரு தக்க ஆசிரியரைத் தேடித் தந்ததும், பின்பு தமிழ்ச் சுவடிகளே கதியாகக் கிடந்த எனக்கு  இலௌகிக த்தொல்லை அணுவளவேனும் இல்லாமற் பாதுகாத்ததும், சிவபக்தியின் மகிமையைத் தம்முடைய நடையினால் வெளிப்படுத்தியதுமாகிய அரிய செயல்களை நான் மறக்கவே முடியாது. அவருடைய ஆசாரசீலமும் சிவபூசையும் பரிசுத்தமும் சங்கீதத் திறமையும் அவரைத் தெய்வமாக எண்ணும்படி செய்தன. அவருக்கு என்பாலுள்ள வாத்சல்யம் வெளிப்படையாகத் தோற்