Posts

Showing posts from March, 2022

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 36

Image
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         01 April 2022         No Comment (மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35 தொடர்ச்சி) குறிஞ்சி   மலர்   இயல்  13  தொடர்ச்சி “விட்டுத் தள்ளுங்கள். கழிசடையாகத் தலையெடுத்திருக்கிறது. எனக்கு இனிமேல் இது புதுக்கவலை” என்று ஏக்கத்தோடு சொன்னாள் அவள். அப்போது முருகானந்தம் மட்டும் தனியாகத் திரும்பி வந்தான். “காசு வைத்துச் சீட்டு ஆடியதற்காகப் பையன்களைப்  போலீசு இலாரியில்  ஏற்றிக் கொண்டு போய்விட்டார்கள். நான் போவதற்குள் பையன் கும்பலோடு  இலாரி யில் ஏறிவிட்டான்” என்று முருகானந்தம் கூறியதும் “அது இருக்கட்டும். காலையில் பையனைக் கவனிக்கலாம். இப்போது வேறு ஒரு காரியத்துக்கு உன் யோசனை தேவை. இந்த அம்மாள் வந்திருக்கிறார்கள் பார்?” என்று முருகானந்தத்தை உட்கார்த்தி வைத்து விவரத்தைக் கூறினான் அரவிந்தன். குறிஞ்சி   மலர் இயல்  14 “கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக் கமழ்நீர் பாய்ச்சி பொற்பூர உள்ளிதனை விதைத்தாலும் அதன் குணத்தைப் பொருந்தக்காட்டும் சொற்பேதையருக்(கு) அறிவு இங் கினிதாக வருமெனவே சொல்லினாலும் நற்போதும் வாராது ஆங்கவர் குணமே மேலாக நடக்குந்தானே” மதுரை நகரத்து வீதி

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 62

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 March 2022         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார். 61. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி “அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது” என்றார் பக்கத்தில் இருந்தவர். “ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?” என்று  சிகரெட் டு பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள். நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, “ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது” என்றேன். “தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன  ஆபீ சு  வேலையா? ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது? அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபார

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 61

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         19 March 2022         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார். 60. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், “அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை” என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே. பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன். உடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன். அங்கே அவருடை

ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்!(1231-1240)-இலக்குவனார் திருவள்ளுவன்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         15 March 2022         No Comment (ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! (1221-1230) தொடர்ச்சி) ஒவ்வொரு வரியில் இன்பத்துப்பால்! திருவள்ளுவர் திருக்குறள் காமத்துப்பால் 124. உறுப்புநலன் அழிதல் பிரிந்தவரை எண்ணிக் கண்கள் மலருக்கு நாணின. (1231) பசலையும் அழும் கண்களும் காதலரின் அன்பின்மையைக் கூறும். (1232) கூடியபொழுது பருத்த தோள்கள் வாடிப் பிரிவை உணர்த்தின. (1233) துணைவரின் பிரிவால் தோள்கள் மெலிந்து வளையல்கள் கழன்றன. (1234) தலைவனின் கொடுமையை வாடிய அழகிய தோள் உரைக்கும்.(1235) காதலரைக் கொடியவர் என்பது பசலையினும் கொடியதே.(1236) அவரிடம் தோள்மெலிவைக் கூறிப் பெருமைப்படுவாயோ நெஞ்சே. (1237) தழுவலைத் தளர்த்தியதும் படர்ந்தது பசலை நெற்றியில் (1238) தழுவலிடையே காற்று புகுந்தாலும் பசலை கொள்கிறாளே இவள்.(1239) நெற்றியின் வாட்டத்தால் கண்களும் பசலை யடைந்தன.(1240) – இலக்குவனார் திருவள்ளுவன் ( தாெடரும்)

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 60

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         14 March 2022         No Comment (அகல் விளக்கு – மு.வரதராசனார். 59. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி “வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்.” “அண்ணன் சந்திரன்?” “அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்.” “அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்? “இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது வாது அறியாதவள்.” அப்போது அம்மா வந்து, “போனது போகட்டும் அப்பா. இப்படி நடப்பது உண்டுதான். நீ போய் அவளுடைய வீட்டுக்காரரைப் பார்த்துத் தக்கபடி சொல்லி அழைத்து வா. எப்படியாவது கணவனும் மனைவியுமாக வாழும்படியாகச் செய். கருப்பமாக இருக்கிற பெண் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கலங்குவது நல்லது அல்ல. கற்பகத்தின் அப்பாவுக்கும் தீராத கவலையாகிவிட்டது. மகனால் ஒரு பங்கும், மருமகனால் ஒரு பங்கும். அப