Posts

Showing posts from September, 2023

ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         30 September 2023        அகரமுதல (  ஊரும் பேரும் 49 : இரா.பி.சேது(ப்பிள்ளை):  ஈச்சுரம்  -தொடர்ச்சி ) ஊரும் பேரும் அகத்தீச்சுரம்      நாஞ்சில் நாட்டில் கன்னியா குமரிக்கு அண்மையில் அகத்தீச்சுரம் என்னும் ஊர் காணப்படுகின்றது. ஆலயத்தின் பெயரே ஊர்ப் பெயராயிற்றென்பது தேற்றம். அக் கோயிலில் உள்ள கல்வெட்டில் ‘குமரி மங்கலத்துக்குத் திரு அகத்தீசுவரமுடைய மாதேவன் என வரும் தொடரால்குமரிமங்கலம் என்பது ஊரின் பெயராகவும், அகத்தீசுரம் என்பது ஆலய த் தின் பெயராகவும் கொள்ளலாகும். குலோத்துங்க சோழன் அகத்தீச்சுரமுடைய ஈசனார்க்கு வழங்கிய நிவந்தம் அச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. 12 அயனீச்சுரம்      வட ஆர்க்காட்டு நாட்டிலே வழுவூர் என்னும் ஊர் உண்டு. அவ்வூரில் அமைந்த பழமையான கோயிலின் பெயர் அயனீச்சுரம் ஆகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் திரு அயனீச்சுரக் கோவிலிற் பழுது பார்ப்பதற்காகவும், பூசனை நிகழ்வதற்காகவும்  சாம்புவராயர் என்பார். தேவதானமாக அளித்த நிவந்தம் கல்வெட்டிற் காணப்படுகின்றது .13 எனவே, அயனீச் சுரம் என்பது வழுவூர்த் திருக்கோயில் ஆகும். சித்தீச்சுரம்    

தமிழ் வளர்த்த நகரங்கள் 8 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கிய மதுரை 2/2

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         29 September 2023        அகரமுதல ( தமிழ் வளர்த்த நகரங்கள் 7 – அ. க. நவநீத கிருட்டிணன் : இலக்கிய மதுரை 1/2 தொடர்ச்சி) அத்தியாயம் 4. இலக்கிய மதுரை  தொடர்ச்சி புதுப்புனல் விழா நடைபெறும் நன்னாளில் இத் துறைக்கண் குழலும் யாழும் முழவும் ஆகிய பல்வகை இன்னியங்கள் முழங்கும் . அரசனால் தலைக்கோல் அரிவையென விருதுபெற்ற ஆடல் மகளிரும் பாடல் பாணரும் அத்துறையைச் சார்ந்த பொழிலிடத்தே ஆடல் நிகழ்த்துவர். நாடக மகளிரின் ஆடல் ஒலியும், இன்னியங்களின் பேரொலியும் கரையில் வந்து மோதும் வெள்ளத்தின் அலையொலியுடன் சேர்ந்து இடிமுழக்கம் போல் ஒலிக்கும். இத்துறைக்கண் பாணர்கள் சென்று யாழிசைத்து மருதப்பண்ணை அருமையாகப் பாடுவர். அவர்கள்  பாடப்பாட மைந்தரும் மகளிரும் நீரில் பாய்ந்து ஆடுவர் ; அவர் தம்முள் ஊடுவர்; ஊடலுணர்ந்து கூடுவர்; கூடி மகிழ்வர் ஒடிப் பிரிவர்: தேடித் திரிவர்;  மலரைச் சூடித் தொழுவர். இங்ஙனம் இருபாலாரும் துறைக்கண் ஆடியமையால் வையை நீர் எச்சிலாயிற்று என்று கூறினர் இன்னொரு புலவர். இளங்கோவடிகள் காட்டும் மதுரை காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத் திருமா மணியாய்த் தோன்றிய கண்

தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார், 2. மாணவரும் தமிழும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         28 September 2023        அகரமுதல (தமிழ்ப் பெரியார் திரு. வி. கலியாண சுந்தரனார் , 1. தமிழ்க்கலை – தொடர்ச்சி) 2. மாணவரும் தமிழும் (15-10-51 அன்று பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு) தமிழ்த் தோழர்களே! இன்று இங்கே தமிழ் மன்றத்துவக்க விழாவுக்குத் தலைமை வகிக்கும்படி நீங்கள் கட்டளை இட்டிருக்கிறீர்கள். என்னுடைய உடல் எந்த நிலையிலே இருக்கின்றது என்பது உங்களுக்கு நன்கு தெரியும். முனைவர். மு. வரதராசனார் அவர்கள் என்னைப்பற்றிச் சிறப்புரை பகர்ந்தார். யான் அச் சிறப்புரைகளுக்கு அருகன் அல்லன். என்னுடைய கண்கள் படலத்தால் மறைக்கப் பட்டிருக்கின்றன. பச்சையப்பன் கல்லூரியின் தமிழ் மாணவ மணிகளை என்னுடைய அகக் கண்களால் பார்த்து மகிழ்கிறேன். தலைவர் முன்னுரை என்று நிகழ்ச்சி நிரலில் குறிக்கப்பட்டிருக்கின்றது. என்னுடைய முன்னுரை ஒழுங்காகவோ, அல்லது தொடர்ச்சியாகவோ இராது. இப்பொழுது என் உடல்நிலை ஒழுங்காகப் பேச இடந்தராமைக்கு வருந்துகிறேன். உங்கள் முன்னிலையில் முதுமை உடலுடன் காட்சி யளிக்கிறேன். ஏதோ இளம்பிள்ளைகள் தமிழ் மன்றத்திலே பேச என்னை அழைத்திருக்கிறார்களே

பூங்கொடி 16 – கவிஞர் முடியரசன்: உலுத்தர் தொல்லை

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         27 September 2023        அகரமுதல ( பூங்கொடி 15 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்- தொடர்ச்சி ) பூங்கொடி உலுத்தர் தொல்லை கடைத்தெரு வழியே காரிகை தனியாய் ஏகின் சிற்றினம் எதம் விளைக்கும் ;    50 நாகிளம் பருவ நல்லியல் மாதர் உறுதுணை யின்றி ஊரில் வெளிச்செலின் நரியென வேட்டை நாயெனத் தொடர்ந்தே ஊறுகள் செய்யும் உலுத்தர் பல்கினர் மக்கட் பண்பு மங்குதல் கண்டோம்           55 தெக்கணம் இப்படித் தேய்வது நன்றாே ? அல்லியின் வரலாறு வளநகர் ஈங்குநான் வந்தது கேளாய் களமர் கெழுமிய கண்கவர் பொழில்சூழ் மயில்நகர் எனும்பேர் மருவிய நகருள் கோசிகப் பேரினன் குலக்கொடி யாவேன்;    60 மாசி மாமகக் தண்புனல் ஆடும் ஆசை துரப்ப ஆணை கோரினேன்; தந்தை தடுத்தும் தவிரரும் ஆர்வம் உந்த அவருரை உதறித் தனிமை அஞ்சிலேன் ஆய்விலா நெஞ்சினேன் சென்றேன்; 65 ஒருமகள் ஆதலின் உருத்துத் தடுக்கா திருந்தனர், ஆங்கோர் இடுக்கண் நேர்ந்தது; (தொடரும்) கவிஞர்   முடியரசன் ,   பூங்கொடி