Posts

Showing posts from February, 2024

வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்

Image
     ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         01 March 2024        அகரமுதல (வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 5. சொல்லும் செயலும் மக்கள் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள். சொற்களாக வெளிப்படுகின்றன. உறுதியான எண்ணங்கள் செயல்களாக உருவடைகின்றன. உள்ளத் துய்மையை உண்மை என்பர். வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்பர். மெய் யால் செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்பர். இங்ஙனம்  உண்மை, வாய்மை, மெய்ம்மை என வழங்கும் மூன்று சொற்களும் சான்ருேரின் ஆன்றமைந்த அரிய பண்புகளை விளக்குவனவாகும். வடமொழியில் வழங்கும் சத்தியம் என்ற சொல்லைத் தமிழர் மூன்று சொற்களால் குறித்ததன் கருத்து உய்த்து உணரற்பாலது . மனம், மொழி, மெய் ஆகிய மூன்று கருவிகளும் ஒற்றுமைப்பட்டுப் புரியும் செயலே வெற்றிபெறும் என்பதை அச் சொற்கள் விளக்கி நின்றன. – சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’  என்று வள்ளுவர் சொல்லுவார்; வாய்ச்சொல்லில் வீரர் ஆகிய சிலர் எதனையும் எளிதாகச் சொல்லிவிடுவர். அதனைச் செயலில் கொணர இயலாது திகைப்பர். ஆதலின் சொல்லிய

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 38 : அரங்கின் தோற்றம்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         28 February 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 :  பூங்கொடிக்கு வரவேற்பு – தொடர்ச்சி ) பூங்கொடி அரங்கின் தோற்றம் பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர், தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர், பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி           ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால்     70           விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித் துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும் இடையறா தருவி இழிதரல் மான நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை                பொழிந்தனள்; மக்கள் புதுமழை கண்டு     75           விளைந்தெழு பயிர்போல் விம்மிதம் கொண்டனர், குளிர்ந்தனர் நெஞ்செலாம், கொடும்அறி யாமைக் களைகளைந் தெறிந்தனர், கருத்தினில் அடிமைத் தளைகள் தறிந்தனர், விடுதலை தாங்கினர்; அரங்கின் தோற்றம்           மக்கட் பரப்பு வான்கடற் பரப்பென 80           மிக்குக் கிடந்தது, மேடைஓர் மரக்கலம் போல விளங்கிப் பொலிந்தது, பூங்கொடி மாலுமி என்ன மதர்த்து நின்றனள், கயல்புலி விற்கொடி கப்பற் கொடிபோல்            உயர்வான் மிசையே ஓங்கிப் பொலிந்தது,  85           அலையிடை மணியென ஆங்காங் கவிர

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 4 : தமிழ்நாட்டுப் போர்க் களங்கள்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         24 February 2024        அகரமுதல (இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 3 : இசைக்கருவிகள் – தொடர்ச்சி) தமிழர் வீரம் தமிழ்நாட்டுப் போர்க் களங்கள் பேராசை பகையும் போரும் எந்நாளும் இவ்வுலகில் உண்டு . மண்ணாளும் மன்னரின் ஆசைக்கு அளவில்லை; அகில மெல்லாம் கட்டி ஆண்டாலும் கடல் மீதிலே ஆணை செலுத்த விரும்புவர்; கடலாட்சி பெற்ற பின்னர் வான வெளியை ஏகபோகமாக ஆள ஆசைப்படுவர். இத்தகைய ஆசையால் வருவது பூசல். “ ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று. இவ்வுலகத்து இயற்கை “ 1  என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். பாரதப் போரும் தமிழரசும் மண்ணாசை பிடித்த மன்னர் வாழும் இம்மாநிலத்தில்  நெடுங்காலம் தன்னரசு பெற்று வாழ்ந்தது தமிழ்நாடு . வாழையடி வாழையென வந்தனர் சேர சோழ பாண்டியர். பாரதப் போர் நிகழ்ந்தபோது பகைத்து நின்ற இரு படைக்கும் வளமாகச் சோறளித்தான் ஒரு தமிழ் வேந்தன். அவன் பெருமையை வியந்து புகழ்ந்தது பாரதநாடு. ‘ ஓர்ஐவர் ஈரையும் பதின்மர் உடன்றெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக் கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்”  என்று அச் சேரன் சீர்மையைச் சில

வள்ளுவர் சொல்லமுதம் 8 : அ. க. நவநீத கிருட்டிணன் : விருந்தும் மருந்தும்

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         23 February 2024        அகரமுதல ( வள்ளுவர் சொல்லமுதம் 7 : அன்பும் அறமும். 2 : அ. க. நவநீத கிருட்டிணன் – தொடர்ச்சி) வள்ளுவர் சொல்லமுதம் அத்தியாயம் 6 விருந்தும் மருந்தும் ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்பது தமிழில் வழங்கும் திருந்திய பழமொழி. தொன்று தொட்டு விருந்தும் மருந்தும் தொடர்புடையனவாகவே விளங்கி வருகின்றன. ‘மருந்தே ஆயினும் விருந்தோடு உண்’, என்பார் அருந்தமிழ் மூதாட்டியார். தெய்வப் புலவராகிய திருவள்ளுவரும், ”  விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று .” என்று விருந்தையும் மருந்தையும் பொருந்தவே தெரிந்து கூறினர். விருந்து என்னும் சொல் புதுமை என்று பொருள்படும்.  புதியராய் இல்லம் புகுந்த மக்களே விருந்தினர் என்று போற்றத் தகுவர்.  இவ் விருந்தினரை உரை யாசிரியராகிய  பரிமேலழகர் இருவகைப் படுத்துக் கூறுவார் . பண்டறி வுண்மையிற் குறித்து வந்தாரும் அஃதின்மையிற் குறியாது வந்தாரும் எனப் பிரிப்பர். முன்பொருகால் அறிமுகம் ஆனது கருதி வந்தவர், அறிமுகம் இல்லாமலே புதியவராகப் புகுந்தவர் ஆகிய இன்னவரே விருந்தினர் ஆவார். இங்ஙனம்  புதிய

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         21 February 2024        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 36 :  கோமகன் மறுமொழி   – தொடர்ச்சி) பூங்கொடி பூங்கொடிக்கு வரவேற்பு அழகிய அல்லி மலையுறை யடிகள் அருண்மொழி முதலோர் அன்புடன் விடைதரச்             சுருளலை எழுப்பும் கருநிறக் கடலுள், பகைபிளந் தோடும் பான்மையன் போல மிகுபுனல் பிளந்து மிதந்து விரையும் மரக்கலம் ஏறி, மணிநீர்க் கடல்தன் புறத்தினில் சூழ்தரல் போன்று மடமை      45           அகத்தினில் சூழ்தர அல்லற் பாடுறும் கடல்நகர்த் துறைமுகம் கண்டனள்; ஆயிடை மடமை துடைக்கும் மனமுளோர் குழுமி   50 பூங்கொடிக்கு வரவேற்பு           ஆழி அடங்க ஆர்ப்பொலி எழுப்பினர், வாழி எனுமொலி வான்முக டுற்றது,           கதிரோற் கண்ட கடிமலர் போலப் புதியோர்க் காணலும் பொலிந்தன முகமெலாம், உள்ளம் உவகை ஊற்றெடுத் தனவே, கள்ளவிழ் மலராற் கட்டிய தெரியல் சூட்டி மகிழ்ந்தனர், தோரண வகைகள்       55           காட்டிய வீதிகள் கடக்க வழியெலாம் வண்ண மலர்கள் வாரி இறைத்தனர், கண்கள் இமைத்திலர் கண்டனர், இன்னியம் செவிவழிப் புகுந்து சிந்தையை நிறைக்கப் புவியிற் காணாப் புதுமை கண்டனர்; 60 பூங்கொடியி