அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 01 September 2021 No Comment துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4: பேராசிரியர் வெ . அரங்கராசன் துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்; இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்! அகச்சான்று: துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி, இன்பம் பயக்கும் வினை. [குறள்.669] பொருள்கோள் விரிவாக்கம்: து ன்பம் உற வரினும் , துணி வினை ஆற்றி , இன்ப த்தைப் பயக்கும் வினை யைச் செய்க . பொருள் உரை விரி வாக்கம்: ஆராய்ந்து மேற்கொண்ட அறம் சார்ந்த ஒரு செயலினைச் செய்ய முயலும்போது எதிர்பார்த்தனவும் எதிர்பாராதனவுமான பல்வேறு வகைப்பாட்டு நடைமுறைச் சிக்கல்கள் குறுக்கிடும்; துன்பங்கள் துரத்தும்; இடையூறுகள் இடைமறிக்கும்; இடர்ப்பாடுகள் படாதபாடு படுத்தும். அவை எல்லாம் வலிமையுடன் முன் வந்து நிற்கும்; பின்னுக்குத் தள்ளும்; கடுமையாக எதிர்க்கும். அத்தகைய நடைமுறைச் சிக்கல்கள், துன்பங்கள் இடையூறுகள், இடர்ப