Skip to main content

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-4

 அகரமுதல




(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி)

81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும்

வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த்

தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால்

இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ?

3. மக்கட் படலம்

வேறு

  1. அத்த மிழகத் தாய்தரும்

முத்த மிழ்த்துறை முற்றிய

மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப்

புத்து ணர்வுறப் போற்றுவாம்.

  • முன் னு மில்லற முற்றியே

தன்ன லங்கள் தவிர்த்துமே

இன்ன லஞ்செய் திசைபெறும்

அன்ன ரே தமி ழந்தணர்.

  • அரசி யன்முத லாகிய

துரிசி லாது துலங்கவே

வரிசை யா க வகுத்துரை

பரிசு காணிவர் பண்பரோ.

  • ஐவ கைத்துன் பகற்றியே

உய்வ கைத்துயி ருற்றிட

கைவ லத்தினிற் காட்டியவர்

மெய்வ கைத்தமிழ் வேந்தரே.

  • நீரி னுந் நன் னிலத்தினும்

கூரு கொண்டு கொடுத்துமே

ஈரி ரும்பொரு ளீட்டுவோர்

மாரி வண்கை வணிகரே.

+++

2. முன்னுதல்-பொருந்தல். 3, துரிசு-குற்றம்,

+++

Comments

Popular posts from this blog

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 3/8 – கருமலைத்தமிழாழன்

பகுத்தறிவுப் பகலவன் பாவேந்தர் பாரதிதாசன் – கூடலரசன் bharathidasan spl.issue