Posts

Thirukkural திருக்குறள் 10

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். - குறள்: 10,   அதிகாரம் : வழிபாடு , கிளை : பாயிரம் , பிரிவு : அறம் . வாழ்க்கை எனும் பெருங்கடல் நீந்திக் கடக்க முனைவோர் , தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும். - கலைஞர் மு. கருணாநிதி

Thirukkral திருக்குறள் 723

Image
திருக்குறள் பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர் இந்தக் குறளின் பொருள்    போர்க்களத்தில் இறப்பார்கள் சாதாரண வீரர்கள் (பலர்); அவைக்களத்தில் அஞ்சாமல் பேசுவர் மிகச் சிலரே திருக்குறள்    (எண்: 723)  அதிகாரம்: அவை அஞ்சாமை 

Thirukkural திருக்குறள் 598

குறள் அமுதம்               உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. (குறள்எண்:598) குறள் விளக்கம்     மு.வ : ஊக்கம் இல்லாதவர் இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் என்றுத் தம்மைத் தான் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாடடார். சாலமன் பாப்பையா : ஊக்கம் இல்லாதவர் பிறர்க்கு உதவும் வள்ளல் யாம் என்னும் மன உயர்வைப் பெறமாட்டார்.   English Version   Thirukural » Porul          The soulless man can never gain Th’ ennobling sense of power with men. ( Kural No : 598 )   Kural Explanation: Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, “we have excercised liaberality “.     ...

திருக்குறள் Thirukkural 129

அடக்கமுடைமை திருக்குறள் - Thirukkural    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே. நாவினால் சுட்ட வடு. - (குறள் : 129 ) தீயினால் சுட்டபுண் புறத்தே வடுவாக இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

Thirukkural திருக்குறள் 320

Image
திருக்குறள் நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்; நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்    துன்பம் எல்லாமும் துன்பம் செய்தவரின் மீதுதான்! துன்பம் வேண்டாம் என்போர் (எந்த ஒன்றுக்கும்) துன்பம் தர மாட்டார்கள்.  திருக்குறள் (எண்: 320)  அதிகாரம்: இன்னா செய்யாமை 

திருக்குறள் Thirukkural 1084

தகையணங்குறுத்தல் திருக்குறள் - Thirukkural    கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். - (குறள் : 1084 ) பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

Thirukkural திருக்குறள் 294

குறள் அமுதம்     உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்.     (குறள்எண்:294) குறள் விளக்கம்       மு.வ : ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான். சாலமன் பாப்பையா : உள்ளம் அறியப் பொய் சொல்லாமல் ஒருவன் வாழ்ந்தால் அவன் உயர்ந்தவர் உள்ளத்துள் எல்லாம் குடி இருப்பான். English Version   Thirukural » Aram           True to his inmost soul who lives,- enshrined,, He lives in souls of all mankind. ( Kural No : 294 )   Kural Explanation: He who, in his conduct, preserves a mind free from deceit, will dwell in the minds of all men.   ...