Posts

Showing posts from April, 2025

ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 23 : புலவர் கா.கோவிந்தன் – வெளிநாட்டு வாணிகம்

Image
ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         04 April 2025         அ கரமுதல (ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு   22 –  சாதகக் கட்டுக்கதைகளும் தென் இந்தியாவும்  –  தொடர்ச்சி) 7. வெளிநாட்டு வாணிகம்  கி.மு. 1000 – 500 பாலத்தீனமும் இந்தியாவும் கி.மு. பத்தாம் நூற்றாண்டில், சிபாவின் அரசி {Queen of Sheba) சாலமன் அரசனுக்கு (King of Solomon) ‘மிளகு போலும், உணவுக்கு மணமூட்டும் பொருள்களின் மிகப்பெரிய குவியலையும், கிடைத்தற்கரிய மதிப்பு மிக்க இரத்தினக் கற்களையும் கொடுத்தாள். சீபா அரசி, சாலமன் அரசனுக்குக் கொடுத்த, மணப்பொருளின் இக்குவியல் போலும் ஒரு மணப்பொருள் குவியல் மீண்டும் வரவேயில்லை. (I Kings. X:10). அந்நாட்களில், இப்பண்டங்கள், இந்தியாவிலிருந்துதான் மேற்கு நாடுகளுக்குச் சென்றன. இம்மணப் பொருள்களும் நவரத்தினங்களும், அரசியின் கைகளை அடைவதற்கு முன்னர், அவை இந்தியப் படகுகளில், ஆப்பிரிக்கக் கடற்கரையை அடைந்தன என உறுதியாகக் கூறலாம். ‘’ஒப்பியரிலிருந்து ஒப்பியர் (Ophir) பொன்னை ஏற்றி வந்த இராம் (Hiram) கப்ப...

க. தமிழ் வளர்ப்போம்– வி.பொ.பழனிவேலனார்

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         03 April 2025         அகரமுதல (௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – -தொடர்ச்சி) திருத்துறைக்கிழார்   கட்டுரைகள் தமிழ்             க. தமிழ் வளர்ப்போம் இலக்கியம் எனின், மக்கள் வாழ்க்கைக் குறிக்கோளை இயம்புவது எனப் பொருள். இலக்கணம் என்றால், வாழ்க்கைக்குக் குறிக்கோளை இயம்பும் முறையை அமையப் பொருத்தும் முறை என்பர் வடமொழிவாணர். இலக்கியமும், இலக்கணமும், (இ)லட்சியம், (இ)லட்சணம் என்னும் வடசொற்களின் மூலம் வடிக்கப்பட்டவை என்பர்.   தூய தமிழ்ச்சொற்களை எல்லாம் தம் மொழியிலிருந்து வந்தவை என்கின்றனர் வடவர்.  ‘தமிழில் முகம் என்னும் சொல் இல்லை,  வடமொழியிலிருந்து எடுத்துக் கொண்டது’ என்கின்றனர்.   ஆரியர் தமிழ்நாட்டிற்குள் வந்த பின்னர், தமது மொழிச் சொற்களைத் தமிழில் சேர்க்கவும், தமிழ்ச்சொற்களை வடமொழிச் சொற்களாக்கவும் தமிழ் தழுவிய கிரந்த எழுத்துகளை ஆக்கினர்.  அவற்று...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 89: சண்டிலியின் அழைப்பு

Image
  ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         02 April 2025         அ கரமுதல (க விஞர் முடியரசனின் பூங்கொடி : 88 : சண்டிலி புகழ்ந்து வேண்டல் - தொடர்ச்சி) பூங்கொடி சண்டிலியின் அழைப்பு பிரிவினை யறியாப் பெருமனக் கொழுநன் பெரிதுறு விழுமமோ டிங்கெனைப் பிரிந்தோன் விரைவினில் வரூஉம் விறலி! எனக்கிசை        —————————————————————           தொக்கு – சேர்ந்து, வரூஉம் – வருவான்.  ++++++++++++++++++++++++++++++++++++ ஊட்டிய தலைவீ ! ஒன்றுனை வேண்டுவல்                பாட்டியல் பயில வேட்டவர் பலர்வட       270           நாட்டிடை வேங்கை நகரினில் வதிவோர் ஊட்டுவோர் ஆங்கண் ஒருவரும் இன்மையின் வாட்ட முறுவது வருங்கால் உணர்ந்தேன் அரிவைநீ அருளுடன் அந்நகர்க் கேகுதல்          ...