செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்எய்த வருமோ இருநிதியம் - வையத்துஅறும்பாவம் என்ன அறிந்தன்று இடார்க்கின்றுவெறும்பானை பொங்குமோ மேல். (பா-17)இவ்வுலகில் அறம் செய்வதால் பாவங்கள் நீங்கும் என்று உணர்ந்து, செல்வம் பெற்றிருந்த காலத்தில் வறியவர்களுக்கு உதவாதவர்களுக்கு, செல்வம் போய் வறுமையுற்ற காலத்தில், அடுப்பிலேற்றிய வெறும் பானை பொங்காதது போல, தாம் முன்னர் அறம் செய்யாத தீவினைப் பயனே காரணம் என்று வருந்த வேண்டுமே தவிர, தெய்வத்தை வெறுப்பதால் பெருஞ் செல்வம் வந்து சேராது.
Popular posts from this blog
பாட்டிசைப்போம் 1 பிறந்தநாள் வாழ்த்து - Happy BIrthday
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment