Popular posts from this blog
பாட்டிசைப்போம் 1 பிறந்தநாள் வாழ்த்து - Happy BIrthday
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
பண்பாடற்ற பாலைவனத்தை உருவாக்குவதில் நாம பங்கேற்க வேண்டா என்னும் உறுதியை இப் படைப்பைப் படைப்போருக்கு ஏற்படுகிறது.'இன்று நினைத்தால் கோயிலை அல்ல - ஒரு தூணைக் கூட நம்மால் படைக்க முடியாது' என்னும் பொன்மொழியை நாம் உள்ளத்தில் நன்கு பதித்துக் கொள்ள வேண்டும். 'இந்தச் சிற்பங்களை மனத்தால்கூடக் காயப்படுத்த உரிமையில்லை' என்பது என்றென்றும் நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். கோயில்களுக்கோ பிற சுற்றுலா இடங்களுக்கோ செல்லும் பொழுது விளம்பரக் கிறுக்கல் கல்வெட்டாளராகவோ ஓவியராகவோ நாமும் மாறாமல் அத்தகையோரையும் தடுத்து நிறுத்த வேண்டும். முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., அவர்கள் காலத்தின் தேவையறிந்து அருமையான கருத்தை அழகாகக் கூறியுள்ளார்கள்.
ReplyDelete