தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணம்கொடையால்கண்ணீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மைகற்பழியா ஆற்றல் கடல் சூழ்ந்த வையகத்துள்அற்புதமாம் என்றே அறி. (பா-16)கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் தண்ணீரின் தன்மை நல்ல நிலத்தாலும், நல்லவர்கள் பண்பு ஈகையாலும், கண்களின் தன்மை மாறாத கருணையாலும், பெண்களின் தன்மை மாறாத கற்பின் வலிமையினாலும் விளங்குவது வியக்கத்தக்கச் சிறப்பு என்பதை நீ அறிவாயாக!
Popular posts from this blog
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment