Posts

திலீபன் சாகவில்லை! – யோ புரட்சி

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 September 2022         No Comment திலீபன் சாகவில்லை ! பசி வந்தால் பற்று பறக்காது பசி வந்தால் பத்தும் பறந்திடுமெனும் பழமொழியை பார்த்தீபன் பொய்யாக்கினான். தேசம் பசித்திருக்கலாகாதென‌ தேகம் பசித்திருந்தான். திருவிழா காணும் நல்லூர் தியாக விழா கண்டதே. ஆலய பூசை மறந்து உறவுகள் அண்ணா உன்முன் திரண்டதே. காந்தி அன்று இருந்திருந்தால் உன் காலடிக்கே வந்திருப்பார். திலீபன் உன் செய்கை கண்டு கிரீடம் தந்திருப்பார். தியாகத்தை பருகியதால்தானா சிறுதுளி நீர் பருகவில்லை. மெழுகாய் உருகியதால்தானா உணவு கேட்டு உருகவில்லை. மரணத்துக்கு போகையில் யாரும் மாலை சூடுவரோ.. இறக்கப் போகுமுன் எனக்குப் பொட்டிடுங்கள் என்பரோ. அன்புத் தாயொருத்தி பொட்டிட்டு மாலையிட‌ புன்னகையோடு போய் உன்னணையில் இருந்தீரே.. மன்னவனுன்னுயிர் போகும்வரை மானம் காத்தீரே. ஒவ்வொரு கணத்திலும் உயிர்த்துளிகள் போய்க்கொண்டிருக்க‌ உணர்வுத்துளிகள் போய்விடாமல் இருந்தீரே. தேசத்தாகம் உமக்குள் இருந்ததால் தேநீர்த்தாகம் வரவில்லை. கொள்கைப்பசி உம்மைச் சூழ்ந்ததால் க...

தமிழ்நாடும் மொழியும் 7 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 September 2022         No Comment (தமிழ்நாடும்மொழியும் 6 தொடர்ச்சி ) தொல்காப்பியர் காலத் தமிழகம் அமிழ்தினுமினிய தமிழ்மொழியிலே தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களிலே பழமைச் சிறப்புடையது தொல்காப்பியமாகும்.  தொல்காப்பியம் ஒரு பல்கலைக் களஞ்சியமாகும் . அந்நூல் ஒரு பொன்னூல், அது இலக்கண நூல் மட்டுமல்ல; பண்டைத் தமிழ் மக்களின் செவ்விய வாழ்க்கையைக் காட்டும் நன்னூலுமாகும். இதனது பெயரும், இது இடைச் சங்ககால நூல் என்பதும் இந்நூலின் தொன்மையை நன்கு விளக்குகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்தினையும் விரித்துக்கூறும் சிறப்புடைய ஒரே பழைய நூல் தொல்காப்பியமே! இதனை, “ ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுது மெழுத்தோடு சொல்கா மருபொருட் டொகை திகழ்பொருட்டே “ என்ற பாடல் இனிது விளக்கும். தொல்காப்பியர் காலம் தொல்காப்பியரின் காலம் என்ன? கி. மு.வா? கி. பி. யா? கி. மு. என்பது டாக்டர் மு. வ. போன்ற பல புலவர் கருத்து. கி. பி. என்பது வையாபுரியார் போன்ற சிலர் கருத்து. இதில் எதுகொள்ள...

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 9

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         25 September 2022         No Comment (இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8 தொடர்ச்சி) ‘ பழந்தமிழ் ’ 3. பழந்தமிழ் தொடர்ச்சி   ஆங்கில மொழியில் பிரித்தானியச் சொற்கள் எந்த அளவு கலந்துள்ளனவோ அந்த அளவு திராவிட  (தமிழ்)ச் சொற்கள் சமசுக்கிருதத்தில் கலந்துள்ளன. ஆனால் இவ்வுண்மை நெடுங்காலமாக  உணரப்பட்டிலது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், பக்கம் 714)   மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் இந் நாட்டு மொழிகளைக் கற்று ஆராய்ந்து ஆரிய மொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட திராவிட மொழிச் சொற்களைத் தொகுத்து எடுத்து அறிவித்துள்ளனர். அதன் பின்னர்தான்  ஆரியம் கடன் கொடுக்குமேயன்றிக் கொள்ளாது என்ற கொள்கை வலி இழந்து மறைந்தது .    ஆரியம் கடன் கொண்டுள்ள சொற்களுள் சில  வருமாறு:  1. அக்கா (=தாய்),  2. அத்தா, அத்தி (=தாய், தமக்கை), 3. அடவி (=காடு),  4. அணி, ஆணி,  5. அணு,  6. அம்பா, அம்ப (=தாய், தந்தை), 7. ஆலி (=பெண்ணின் தோழி),8. கடுக, கடு (=சாரம், காரம்),  9. கலா...

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” நூல் 3/3

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         24 September 2022         No Comment (சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 2/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு 1) காற்று: உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தமையால் காற்று என்பதற்கு, ‘உயிர்ப்பு’ என மற்றொரு பெயரையும் நம் முன்னோர்கள் வைத்தனர். காற்று அங்கும் இங்கும் அசைவதால் ‘சலனம்’ எனப்பட்டது. உலவியதால் ‘உலவை’ எனப்பட்டது. வடக்கில் இருந்து வரும் காற்று வடந்தை எனப்பட்டது. அது வாட்டும் தன்மையால் வாடை எனப்பட்டது. மேற்கே இருந்து வருவதால் அது மேல் காற்று, எனப்பட்டது. அது கோடை கிழக்கே இருந்து வருவதால் அது கீழ்க் காற்று எனப்பட்டது. அது கொண்டல். தெற்கே இருந்து வருவதால் அது தென்றல் எனப்பட்டது. ஓரிடத்தில் எப் பொருளும் இல்லையெனில் அது காலி இடம். கால்+இ=காலி (கால்=காற்று). உலவுவதால் உலகம் எனப்பட்டது. உருள்வதால் சக்கரம் எனப்பட்டது. கொள வடிவு உடையதால் பூகோளம் எனப்பட்டது.. செந்நிறத்தில் உள்ளது செவ்வாய் எனப்பட்டது. சூரிய...

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 7

Image
  அகரமுதல +++  இலக்குவனார் திருவள்ளுவன்         24 September 2022         No Comment (ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 7 மருத நிலம்‌ தொடர்ச்சி ஓடை     இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர்.  மயிலோடை என்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும்,  பாலோடை இராமநாதபுரத்திலும்,  செம்போடை  தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம்.   மடை     கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள்  மடை யென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும். இத் தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள  பத்தமடை என்னும் பத்தல் மடை யும், 68   பாலாமடை யும், மதுரையிலுள்ள  மேலமடை  முதலிய ஊர்களும் இதற்குச் சான்றாகும். ஏரி     ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலுக்குப் பயன்படும் தண்ணீரைத் தேக்கி வைக்கும் நிலையம் ஏரி எனப்படும். இத் தகைய ஏரியின் மருங்கே எழுந்த ஊர்கள் தமிழ் நாட்டிலே பலவாகும். ச...