யாவினும் புண்ணியம் எழுத்தறிவித்தலே! - பாரதியார்
இலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2015 No Comment யாவினும் புண்ணியம் எழுத்தறிவித்தலே ! வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளனவூர்கள் நகர்க ளெங்கும் பலபல பள்ளி தேடு கல்வியி லாதொ ரூரைத் தீயி னுக்கிரை யாக மடுத்தல் கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் … …. … இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைக ளியற்றல் அன்ன சத்திர மாயிரம் வைத்தல் ஆல யம்பதி னாயிர நாட்டல் … …. அன்ன யாவினும் புண்ணியங் கோடி ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் சுப்பிரமணிய பாரதியார்: வெள்ளைத் தாமரை (படங்கள் : த.இ.க.கழகம், விக்கிபீடியா, அனைவருக்கும் கல்வி மாநாட்டறிக்கை & பல்லடம் தாய்த்தமிழ்ப்பள்ளி) ( அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25 .10.2015 )