இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : August 25, 2011
களவு வெளிப்பட்டுவிடின் கற்பு நிலையை எய்துதல் வேண்டும். அஃதாவது இருவர்க்கும் திருமணம் நிகழ்தல் வேண்டும். திருமணம் நிகழவில்லையேல் இருவரும் உயிர் வாழார். “கரணம் தப்பின் மரணம்” என்றால் மணச்சடங்கு; மணச்சடங்கு நிகழும் நிலை இல்லையேல் காதலர் இருவரும் உயிர் வாழார் என்பதாம். அதனாலேயே “கந்தருவம் கற்பின்றி அமையும்; களவு கற்பின்றி அமையாது” என நச்சினார்க்கினியர் கூறியதும் ஆகும்.
(தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்:172)
Comments
Post a Comment