நீரும் நிழலும் நிலம் பொதியும் நெற்கட்டும் பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும் வரும்திருவும் வாழ்நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும் தரும்சிவந்த தாமரையாள் தான்.(பா-21) செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் வஞ்சகம் இல்லாதவர்களுக்கு எக்காலத்தும் நீர் வளமும், உறைவிடமும், நிலம் நிறைய நெற்கட்டுகளும், பெருமையும், புகழும், சிறந்த வாழ்க்கையும், ஊர்களும், வளரும் செல்வமும், நீண்ட ஆயுளையும் தருவாள்.
Popular posts from this blog
பாட்டிசைப்போம் 1 பிறந்தநாள் வாழ்த்து - Happy BIrthday
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment