ஆவாரை யாரே அழிப்பர் அதுவன்றிச் சாவாரை யாரே தவிர்ப்பர் - ஓவாமல் ஐயம்புகு வாரை யாரே விலக்குவார் மெய்அம் புவியதன் மேல். (பா-13)அழகிய இம்மண்ணுலகின் மீது உண்மையாக வாழ்கின்றவரை அழித்திட எவருமே இல்லை. அதைத் தவிர, இறக்கக் கூடியவரை இறவாமல் தடுத்து நிறுத்தக் கூடியவர் எவரும் இல்லை. ஓய்வின்றி பிச்சையெடுக்கச் செல்பவரை, பிச்சையெடுக்காமல் தடுப்பவரும் யாருமில்லை. எனவே, வினைப்பயனால் ஏற்படும் இன்ப, துன்பங்களை எவராலும் தடுக்க முடியாது.
தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! - பெருஞ்சித்திரனார்
இலக்குவனார் திருவள்ளுவன் 28 திசம்பர் 2014 கருத்திற்காக.. வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! -பாவலரேறு பெருஞ்சித்திரனார் அகரமுதல 59
Comments
Post a Comment