கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 78 : எழிலியின் கையறுநிலை
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 19 December 2024 அகரமுதலாக ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 77 – தொடர்ச்சி) பூங்கொடி 16. எழிலியின் வரலாறறிந்த காதை – தொடர்ச்சி எழிலியின் கையறுநிலை `பெயருங் கூத்தன் பெருவளி தன்னால் உயர்கலம் மூழ்கி உயிர்துறந் தான்’என உயிர்பிழைத் துய்ந்தோர் வந்தீங் குரைத்த 60 கொடுமொழி செவிப்படக் கொடுவரிப் புலிவாய்ப் படுதுயர் மானெனப் பதைத்தனள், கதறினள்; துடித்தனள், துவண்டனள், துடியிடை கண்ணீர் வடித்தனள், `என்னுடை வாழ்வில் வீசிய பெரும்புயல் விளைத்த துயரம் பெரிதே! 65 மாலுமி இல்லா மரக்கலம் ஆகிப் பாழும் இடர்க்க...