Posts

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         13 June 2024         அ கரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி ) பூங்கொடி மூதாட்டி தன் வரலாறுரைத்தல் வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்; ‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச் செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும் புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப் புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன், நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும் அல்லும் பகலும் செல்லும் சிதலும் சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சிய குறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ! தமிழுக் குறுபகை எத்தனை தாயே! அமுதத்தமிழே! அன்னாய்! வாழி! அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம் நவையற நிறுவி நடத்துதல் என்பணி, நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்; வாழ்த்தும் பாராட்டும் ஆவல் தமிழில் அளவிலா துற்றனை! குறள் நூல் தொல்காப் பிய நூல் இரண்டும் மறுவற உணர்ந்தோர் தெருளறி வுறுவர், வாழ்கநின் னுள்ளம் வாழ்கநின் துறவு! உன்போல் துறவுளம் உடையவர் ஒருசிலர் அன்பால் தமிழின் ஆக்கங் கருதித் துயரெது வரினும் து...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 19 : செங்கோன் தரைச் செலவு

Image
  ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்         08 June 2024         அ கரமுதல ( ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை-தொடர்ச்சி ) தமிழர் வீரம் செங்கோன் தரைச் செலவு செங்கோன் படையெடுப்பு செங்கோன் என்பவன் பழங்காலத் தமிழரசருள் ஒருவன். அவன் ஆண்ட நாடு  பெருவளநாடு . அந்நாட்டில் மணிமலையும், பேராறும், முத்தூரும் இருந்தன என்பர். அம் மன்னவன் அயல் நாட்டின்மீது படையெடுத்தான்; போர் புரிந்தான்; வெற்றி பெற்றான். அப்போரைப் பாடினார்  சேந்தன் என்ற செந்தமிழ்க் கவிஞர் .  “செங்கோன் தரைச் செலவு”  என்பது அப்பாட்டின் பெயர். யாத்திரை என்ற வடசொல்லைப் போலவே  செலவு என்ற தமிழ்ச் சொல்லும் படையெடுப்பைக் குறிப்பதாகும் . எனவே, தரைவழியாகச் செங்கோன் படையெடுத்து மாற்றாரை வென்ற செய்தி அப்பாட்டிலே குறிக்கப்பட்டதென்று கருதலாம். களவழி நாற்பது செங்கண்ணனும் சேரமானும் சோழ மன்னனாகிய கோச் செங்கண்ணனும், சேரமானும் மாறுபட்டனர்.  கழுமலம்  என்னும் இடத்தில் இருவர் சேனைக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. சேர...

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 07. திருக்கோவையார் உரைநயம்

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         07 June 2024         அ கரமுதல ( என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!-தொடர் ச்சி) என் தமிழ்ப்பணி அத்தியாயம் 4. திருக்கோவையார் உரைநயம் மணிவாசகர் பாடிய இருவாசகங்கள் திருவாசகமும், திருக்கோவையாரும்  ஆகும். செவிக்கும் சிந்தைக்கும் இனிக்கும் சொல் நயமும் பொருள் நயமும் வாய்ந்த திருவாசகத்தைத் “ தித்திக்கும் திருவாசகத்தேன் ” எனப் போற்றும் புலவர்கள், திருக்கோவையார் எண்ணுவார்-எண்ண விழைவுகளுக்கேற்ப. ஆரணமாகவும், “ஆகமத்தின் காரணமாகவும் அமைந்து ஆயுந்தொறும் ஆராம்பேரின்ப வாரிதியாகும் எனப் போற்றுவர். கோவையார் பெற்றிருக்கும் இவ்வின்பக்குவியல்களைப் படிப்பார் உள்ளத்தில் கொண்டு சென்று கொட்டுவது, அக்கோவைக்குப்  பேராசிரியர் வகுத்திருக்கும் உரை யாகும். அவர் உரை மட்டும் இல்லாமல் போயிருந்தால் கோவையின் கருத்துச் செறிவுகளைக் கண்டுகளிப் பெய்த வாய்ப்பே இருந்திருக்காது. தோலும் தொலுப்பும் அகற்றிச் சுளை சுளையாக எடுத்துத் தேனில் தோய்த்து அளித்த வழியே பல...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         06 June 2024         அ கரமுதல (கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 51 : எழுச்சி யூட்டல் – தொடர்ச்சி) பூங்கொடி அத்தியாயம் 11. ஏடு பெற்ற காதை பொழிலில் பூங்கொடி தாமரைக் கண்ணி தவிர்ந்த பின்னர்க் தோமறு தமிழ்க்குக் கொண்டுகள் ஆற்றப் பூமியிற் பிறந்த பூங்கொடி ஒருநாள்  பொழில் நலங் காணும் விழைவினள் செல்வுழி, மூதாட்டி வருகை மழைமுகங் கண்ட மயிலென ஒருத்தி நரை மூதாட்டி நல்லன எண்ணிப் புரையறு செயலே புரிவது காட்டும் முகத்தினள், கல்வி முற்றிய அறிவினள்,  அகத்தினில் அன்பு நிறைந்தவள் ஆங்கே எதிர்ப்பட் ‘டாயிழாய் யார்நீ ‘ எனலும், பூங்கொடி தன் வரலாறு கூறல் முதிர்பரு வத் தாய்! மொழிகுவென் கேளாய்! உலகந் தோன்றி ஊர்ந்து வளர்ந்து பிள்ளைப் பருவத்துப் பேசிய மொழியாம் வெல்லத் தமிழ்மொழி வெல்லப் பணிபுரிந் தறிவொளி விளங்க ஆற்றினர் தந்தை, குருடு படுமதிக் குழுவினர் சதியால் மாண்ட வடிவேல் மனைவிளக் கருண்மொழி ஈன்ற மகள் யான் என்பெயர் பூங்கொடி, இல்லறம் தவிர்ந்தமை கூறல் தனித்தொரு மகன் இக் கரணியில் வாழ ...

இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 18 : வீரப் புகழ்மாலை

Image
  ஃஃஃ        இலக்குவனார் திருவள்ளுவன்         01 June 2024         அ கரமுதல ( இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 17 : பேர் தெரியாப் பெருவீரர் – தொடர்ச்சி ) தமிழர் வீரம் வீரப் புகழ்மாலை வீரமும் ஈரமும் தமிழ் நாட்டுக் கவிகள் எஞ்ஞான்றும் படைத்திறத்தையும் கொடைத் திறத்தையும் பாராட்டிப் பாடுவர். “ பேராண்மையும் ஊராண்மையும் உடையவர் மேலோர்; அவரே புகழத் தக்கவர். வீரமும் ஈரமும் அற்றவர் கீழோர். அன்னாரைப் பாடுதல் கவிதைக்கு இழுக்கு; நாவிற்கு அழுக்கு”  என்பது அவர் கொள்கை. ஔவையாரும் செல்வரும் புலமையுலகத்தில் ஔவையாருக்குத் தனிப்பெருமை உண்டு. “ ஔவை வாக்குத் தெய்வ வாக்கு ” என்று கருதப் பட்டது. ஆதலால், அரசரும் செல்வரும் அவர் வாயால் வாழ்த்துப் பெற ஆசைப்பட்டார்கள்; ஒருநாள் ஔவையார் ஒரு சிற்றூரின் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவ்வூர்ச் செல்வர் இருவர் அவரிடம் போந்து, “அம்மையே உமது வாக்கால் எம்மையும் பாடுக” என்று வேண்டி நின்றார். வசைப் பாட்டு அவ்விருவரையும் நன்றாகத் தெரிந்தவர் ஔவையார். வீரத்திற்கும் அவருக்கும் வெகு...

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!

Image
  ஃஃஃ         இலக்குவனார் திருவள்ளுவன்         31 May 2024         அ கரமுதல (என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி நெஞ்சே தொடர்ந்து வருக! ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும். நெஞ்சே!  காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும் . அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது. அம்மலரும் மக்கள் முடியில் படிந்து மாண்புற்றது அந்நிகழ்ச்சி, நம் பிரிவு முயற்சி நம் காதலிக்குக் கொடுமை புரிவதாகாது. மாறாக வாழ்வுப் பயனை அவள் அடையுமாறு பண்ணி, பிறரையும் வாழ்விக்கப் பண்ணும் என்ற உண்மையை. உணர்த்தாதோ? “நெஞ்சே! மராமரக் காட்சியைக் கடந்து சென்றால் காட்டுப் பன்றியைச் செந்நாய் தாக்கும் காட்சியைக் காண்பை; செந...