Posts

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         27 December 2023        அகரமுதல ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல் – தொடர்ச்சி ) 6.  கல்லறை காண் காதை நிலவும் உடுவும் மாலைப் பொழுதில் மேலைத் திசையில் சிலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள் முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப் பரிதி சென்றனன் இரவெனும் ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட   5 நீல வான நெடுந்திரை தன்னில் கோல வட்டம் குறித்தனன், அதனை ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது; துதலிற் புரளும் சுருள்குழல் வரைய 10 நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன்     களங்கப் பட்டது கண்டனன் நெஞ்சம் துளங்கிக் கனன்று தூரிகை வீசி உதறினன்; கிண்ணம் ஒன்றனிற் பட்டுச் சிதறிய வெண்ணிற வண்ணம் சிரித்திட 15 அதனை உடுவென அறைந்தனர் உலகோர்; வண்ண அவ் வுடுக்களும் வட்ட நிலாவும் கண்ணுங் கருத்தும் களிமிகப் பொழிலகம் வெண்ணிறங் கொள்ள ஒளிக்கதிர் வீசின;                 தாமரைக்கண்ணி வினவல் அவ்விடை அவண்வரும் ஆ...

ஊரும் பேரும் 61 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – தானமும் தருமமும்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         23 December 2023        அகரமுதல ( ஊரும் பேரும் 60 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இறையும் அறமும்-தொடர்ச்சி) ஊரும் பேரும் தானமும் தருமமும் “பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள் பார ளித்ததும் தருமம் வளர்த்ததும்” தானம் தமிழ் நாட்டார் நன்கறிந்து போற்ற வேண்டும் என்று முறையிட்டார் பாரதியார். அம் மன்னர் அளித்த தான தருமங்கள் சில ஊர்ப் பெயர்களால் இன்றும் அறியக் கூடியன. தஞ்சை நாட்டில் உள்ள  அன்னதானபுரம், தருமதானபுரம், மகாதானபுரம், உத்தமதானபுரம் முதலிய ஊர்கள் முற்காலத்தில் அற நிலையங்களாக விளங்கின  என்பதற்கு அவற்றின் பெயர்களே சான்றாகும். தருமம் இன்னும், அறஞ் செய விரும்பிய அரசரும் செல்வரும் பலவிடங்களில் சத்திரமும், சாவடியும், விடுதியும் அமைத்தார்கள். அவற்றின் பெயர்கள் இப்பொழுது ஊர்ப் பெயர்களாக வழங்குகின்றன. நெல்லை நாட்டிலுள்ள  பாவூர்ச் சத்திரமும் , திருச்சி நாட்டிலுள்ள  செட்டி சத்திரமும் ,  அம்மா சத்திரமும் , தருமசாலையால் பெயர் பெற்ற ஊர்கள் என்பது வெளிப்படை.  ...

தமிழ் வளர்த்த நகரங்கள் 20 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கியங்களில் தில்லை

Image
  ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்         22 December 2023        அகரமுதல (தமிழ் வளர்த்த நகரங்கள் 19 – அ. க. நவநீத கிருட்டிணன்: கூத்தன் ஆடும் அம்பலங்கள் – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நகரங்கள் 20 – அ. க. நவநீத கிருட்டிணன்: இலக்கியங்களில் தில்லை 14.  இலக்கியங்களில் தில்லை இறைவன் திருவருள் வெள்ளத்தில் திளைத்த  அருளாளர்களால் பாடிப் பரவப் பெற்ற பழம்பதிகளைப் ‘பாடல் பெற்ற தலங்கள்’  என்று பாராட்டுவர். அத்தகைய பாடல் பெற்ற தலங்களுள் பழமையும் பெருமையும் வாய்ந்த தலம் தில்லையாகும். சைவ நன்மக்களின் தெய்வத் திருக்கோவிலாகத் திகழும் தில்லைப்பதியினைப் புகழ்ந்து சொல்லாத சைவக் கவிஞர் இலராவர். திருவாசகத்தில் தில்லை இறை மணத்தாலும் கலைகலத்தாலும் அன்றும் இன்றும் தலைசிறந்த தலமாக விளங்கும் தில்லைக்கு மாணிக்கவாசகரை வாவென்று வண்ணப் பணித்து வான்கருணை செய்தருளினான் இறைவன். அங்கு மாணிக்கவாசகர், சிவபெருமானது அருட்கோலத்தைக் கண்ணுரக் கண்டு களித்தார். அந்த உண்மையைத் தாம் பாடிய திருவாசகத்தில் ‘கண்ட பத்து’ என்னும் பதிகத்தில் ‘கண்டேன்! கண்டே...

கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல்

Image
  ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன்         20 December 2023        அகரமுது ( கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 :  குறளகம் புகுதல் – தொடர்ச்சி) அடிகள் அடைக்கலம் அருளல்      நல்லறம் எவைஅவை நயந்திடும் அவர்எம் அல்லல் கண்டதும் அரும்பினர் கண்ணீர்        துடைப்பேன் துயர்எனத் துடைத்தனர் அந்நீர்; 110 உடைப்பெருஞ் செல்வம் உற்றேன் போலக் களித்தேன் தாயின் கருணையைக் கண்டேன்; உளத்தே நிறையும் உவப்புடன் குறளகத் தொண்டுகள் புரியும் தோகை இவளிடம்         விண்டுளம் நண்பு கொண்டுளேன் யான்’ என;     115 கோமகன் அகலுதல்      `அல்லி! நின்வர லாறு தெரிந்தேன் மெல்லியல் இவளை வஞ்சியின் துணையால் அடைவென்’ எனவுரைத் தகன்றனன் கோமகன்;  —————————————————————      நத்தினர் – விரும்பினர், தம்பினும் – தம்தம்பி, வகித்துளோர் – அடைந்துள்ளவர், கசடு – குற்றம், அதாஅன்று – அதுமட்டுமன்றி, தோகை – மயில் போன்ற பூங்கொ...

ஊரும் பேரும் 60 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இறையும் அறமும்

Image
  ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன்         16 December 2023        அகரமுதல ( ஊரும் பேரும் 59 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – சாத்தங்குடி – தொடர்ச்சி) ஊரும் பேரும் இறையும் அறமும் சிவபாத சேகர நல்லூரும் மங்கலமும் சைவ சமயத்தைச் சார்ந்த பெரு மன்னர்கள் தமிழ் நாட்டில் அரசு வீற்றிருந்தபோது சிவம் மணக்கும் சொற்களை ஊர்ப் பெயராக்கினார்கள். சிவபாத சேகரன் என்னும் சிறப்புப் பெயர் பூண்ட இராசராசன் உண்டாக்கிய சிவபாத சேகரபுரம் இப்பொழுது  சிவாயம்  என வழங்குதலை முன்னரே கண்டோம். அம்மன்னன் பாண்டி நாட்டில் திருநெல்வேலிக்கு மேற்கேயுள்ள நல்லூரில் சில நிலத்திற்குச் சிவபாத சேகர நல்லூர் என்று பெயரிட்டு, அதனைச்  சேரவன் மாதேவி க் கயிலாச நாதர் கோயிலுக்கு தேவதானமாக விட்ட செய்தி சாசனத்தால் விளங்குகின்றது. 1  இன்னும்  சிவபாத சேகர மங்கலம்  என்ற ஊர்  திருக்கடவூர்க் கோயிற் சாசனத்தில்  குறிக்கப் படுகின்றது. 2  ஆகவே, சிவபாதசேகரன் பெயரால் அமைந்த புரமும், நல்லூரும், மங்கலமும் தமிழ் நாட்டில் சைவ சமயத்தின் பெருமையை விளக்கி நின்...