புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.36- 1.6.40
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 25 August 2022 No Comment (புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.6.31- 1.6.35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 6. தாய்மொழிப் படலம் கூட்டிய புலவரைக் குமரி நாட்டிடை நாட்டிய தமிழ்க்கொடி நுடங்கு நாளவைக் கோட்டியி லவரவர் கொணர்ந்த பாக்களை ஏட்டிடை யிருந்தரங் கேற்றி னானரோ. அண்ணிய புலவர்பே ரவையிற் றங்கள்பாக் கண்ணிய வுட்பொருட் கருத்தைப் பேரவை உண்ணியே யுடன்பட வுரைத்துத் தம்முளத் தெண்ணிய படியரங் கேற்றி னானரோ. 38. அவ்வரங் கேறிய வரிய நூல்களை ஒவ்வொரு தமிழரு மோதி யின்புற அவ்விடை யேடெழுத் தாணி யோடமை செவ்விய இலச்சினை செறித்திட் டானரோ. 39. அவ்வகை யொவ்வொரி யாண்டி னோர்முறை செவ்விய நூலரங் கேற்றிச் சீருற ஒவ்விய படியெலா முழைத்துத் தீஞ்சுவை வவ்விய முத்தமிழ் வளர்த்து வந்தனன். 40. ஈங்கிது வாகவாண் டிருந்து செந்தமிழ்ப் பாங்குட னாய்தமிழ்ப் பாவல் லோர்களால் ஓங்கிய முத்தமி ழோதி யத்தமிழ் ஆங்குயர் வழிகளு மாய்ந்து வந...