தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17
அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 28 October 2021 No Comment ( தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 9/17 தொடர்ச் சி ) தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 10/17 முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரம்மானை முடியுடை மூவேந்தர் முன்னாண்டா ரெனிற்பின்னர் அடிமையில் நம்தமிழர் ஆழ்ந்ததேன் அம்மானை ஆழ்ந்ததோ ஒற்றுமையின் அகன்றதால் அம்மானை (46) புலவர் அன்று தொடங்கி அருந்தமிழ்நற் புலவோர்கள் சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ரம்மானை சென்ற இடமெல்லாம் சிறப்புற்றா ராமாயின் இன்று முதற்பெருமை இலாததேன் அம்மானை நன்று சொனாயினியும் நழுவவிடா ரம்மானை (47) வரிசை பலசெய்து வண்தமிழ்நற் புலவோர்கள் அரசர் அடங்கிமிக அரசாண்டார் அம்மானை அரசர் அடங்கிமிக அரசாண்டா ராமாகில் அரசரினும் புலவர்தம் ஆற்றலென்ன அம்மானை ஆற்றல் தமிழ்தந்த ஆற்றலே அம்மானை (48) விசிறிதன் கைக்கொண்டு விசிறினன்காண் அம்மானை விசிறிதன் கைக்கொண்டு விசிறியது மெய்யாகில் விசிறிய காரணத்தை விளம்பிடுவாய் அம்மான...