Posts

தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார்: 3/17

Image
 அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         30 September 2021         No Comment ( தனித்தமிழ்க் கிளர்ச்சி – சுந்தர சண்முகனார் : 2/17 தொடர்ச்சி ) தனித்தமிழ்க்   கிளர்ச்சி  : 3/17 தேனுலவு தருவின்கீழ்த் தேவருள தாக்கூறும் வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்கா தம்மானை வானுலகில் தமிழ்ச்சுவைபோல் வளமிருக்காதெனின் அந்த வானுலகை உயர்ந்ததா வாழ்த்துவதேன் அம்மானை வாழ்த்துபவர் தமிழ்ச்சுவையின் வளமறியார் அம்மானை       (11) இறவாத முத்தியை எண்ணிச் சிலருலகில் பிறவாமை வேண்டுமெனப் பித்துண்டார் அம்மானை பிறவாமை வேண்டுவோரைப் பித்தர் எனலாமோ பிறந்து பயனென்ன பெருந்துன்பம் அம்மானை பிறந்து தமிழின்பம் பெறவேண்டும் அம்மானை       (12) அமிழ்தான நீர்சூழ்ந்த அகல்நிலத்து நாடுகட்குள் தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் அம்மானை தமிழ்நாடென் றாலேயோர் தனியின்பம் தோன்றுதற்குத் தமிழ்நாட்டில் சிறப்பென்ன தங்கியுள தம்மானை தமிழைவிடச் சிறப்பென்ன தங்கவேண்டும் அம்மானை       (13) மன்னிய தெய்வம் மதுரையில் பாண்டியனாய் நண்ணியதா ந...

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 September 2021         No Comment துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4: பேராசிரியர்   வெ . அரங்கராசன்    சமுதாயம் சார்ந்தவற்றுள் மருத்துவம் சார்ந்த ஒர் உண்மை நிகழ்வு:   தம்முயிரைப் பற்றிச் சிந்திக்காமல், பல்லுயிர்களைக் காத்த நல்லறத்தர்:  குடியேற்றம் [குடியாத்தம்] மண்ணுக்குப் பெருமையைக் குடியேற்றிய நல்லறத்தர் செவிலியர் செயக்குமார்.  பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர் செயக் குமாரை நேரில் அழைத்து,   மாண்பமை முதல்வர் முத்து வேல் கருணாநிதி இசுதாலின்  அவர்கள் பாராட்டிப் பெருமைப்படுத்தி, அகம் மகிழ்ந்த அரிய உண்மை நிகழ்வு.   வேலூர் மாவட்டம் குடியேற்றம் நெல்லூர்ப்பேட்டைப் பாவோடும்தோப்பு, நீலிக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் செயக் குமார் (36). இவர் கோசா மருத்துவ மனை என அழைக்கப் படும்  சென்னை திருவல்லிக்கேணி கத்தூரிபா காந்தி மகப் பேற்று நல அரசு மருத்துவ மனையில் ஆண் செவிலியராக அரிய பணி புரிந்துவருகிறார்.   இந்...

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 32

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         28 September 2021         No Comment ( அகல் விளக்கு – மு.வரதராசனார். 31. தொடர்ச்சி ) அகல்   விளக்கு அத்தியாயம் 13(தொடர்ச்சி) அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த்  தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது . அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துபோய்ச் சன்னல் வழியாகப் பார்த்து வந்தேன். அவன் பழையபடி அதே கோலத்தில் கிடந்தான். கடிதம் காலையில்தானே வந்திருக்கிறது. அதற்குள் எப்படி நஞ்சு வாங்கிக்கொண்டு வந்து அறையில் வைத்திருக்க முடியும். வீணாக நம் மனம் அஞ்சுகிறது என்று ஒருவாறு தேறினேன். அப்பால் சிறிது நேரத்தில் அவனுடைய அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டத...

போர்கள் – சி.இலக்குவனார்

Image
  அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         27 September 2021         No Comment    ( இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  27 –  தொடர்ச்சி ) இலக்கியம்   கூறும்   தமிழர்    வாழ்வியல்  ( சங்கக்   காலம் )  28 15. போர்கள்  ‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது.  ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள.  கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. “ ஒருவனை   ஒருவன்   அடுதலும்   தொலைதலும்   புதுவது   அன்றுஇவ்   வுலகத்   தியற்கை ”    (புறநானூறு -76) என்று  இடைக்குன்றூர்கிழார்  இயம்புவது மனித இயல்பை எடுத்துக்காட்டுவதாக...